twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாளை மீனு மாளவிகா சித்திரம் பேசுதடி படத்தில் வாளை மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் கல்யாணம் என்றகானா பாட்டுக்கு செம குத்து குத்திய மாளவிகாவுக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் வந்துகுவிய ஆரம்பித்துள்ளது.அத்தனையும் அட்டகாச குத்து என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல்சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயுள்ளார் மாளவிகா.சென்னையின் பிரபலமான கானா பாட்டுக்காரர் கானா லோகநாதன். ஏற்கனவே சிலபடங்களில் மீன்களை அடிப்படையாக வைத்து கானாப் பாட்டுக்களை எழுதிப்பாடியிருந்தாலும், சித்திரம் பேசுதடியில் பாடிக் கொண்டே நடித்தும் அசத்தியிருக்கிறார்லோகநாதன்.கருப்பு உருவம், கண்ணை அடிக்கும் மஞ்சள் ஜிகினா சட்டை, பட்டு வேட்டி,இரவிலும் ஒரு கூலிங் கிளாஸ், சலூன் கடைகளில் மாடலுக்கு வைத்திருப்பார்களே..அது மாதிரியான அந்தக் கால டிஸ்கோ ஹேர் ஸ்டைல், கையில் ஒரு பிரேஸ்லெட், வெள்ளை செருப்பு சகிதம் உடம்பை ஸ்டிப்பாக வைத்துக் கொண்டு, ஆற்காடுவீராசாமி மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு, இரண்டு மணிக்கட்டுகளை மட்டும்ஆட்டி ஆட்டி, டிஎம்எஸ்-மசிேயா வாசுதேவன் குரலை கலந்து குல்பி ஐஸ் குரலில்இவர் பாடி நடித்த வாளை மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் தான்இப்போது எல்லா டிவிக்களிலும் டாப் டென்னில் முதலிடத்தில் நங்கூரம் பாய்ச்சிநிற்கிறது.கூடவே பாடலில் இவருக்கு மைக் பிடிக்க ஒரு அக்குணி.. லோகநாதனை விட அதிகஸ்டிப்பாக, மைக்கை முறைத்தபடியே நிற்க, களை கட்டியது பாட்டு.இந்த இருவரும் பாடலுக்கு அழகு சேர்க்க, காட்சிக்கு அழகு சேர்த்தார் மாளவிகா. மஞ்சள் சேலையை ஏத்திக்கட்டி, அங்கம் எல்லாம் சேத்துக் காட்டி, குதித்துக் குதித்து மெட்டுக்கு ஏத்தபடி வெட்டி, வெட்டி குத்தாட்டம்போட்டார் மாளவிகா. பாடலை படமாக்கிய விதமும் ரொம்ப புதுமையாக இருக்க, செம பேமஸாகிவிட்டது வாளை மீனுக்கும்..வெலங்கு மீனுக்கும்...பாட்டு. லோகநாதன் பாடும் தோரணையைப் பார்ப்பதா? சைடில் குத்தி எடுக்கும்மாளவிகாவைப் பார்ப்பதா? என்று பாடலைப் பார்க்கும் அனைவரையும் சந்தோஷமாய் குழப்பியது பாடல்தொலைக்காட்சி சேனலை திருப்பினாலும் வாளை மீன் பாட்டுதான். இந்த ஒரே பாட்டின் மூலம் மறுஜென்மம் எடுத்துவிட்டார் மாளவிகா.ஹீரோயினாக ஒரு காலத்தில் கோலிவுட்டை வலம் வந்த மாளவிகா திடீரெனஇந்திக்குப் போனார். அங்கு சியூஅட் 9 என்ற படத்தில் பலான காட்சிகளில்பயங்கரமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதே வேகத்தில் சித்திரம் பேசுதடியில் வாளை மீன் பாட்டுக்கு புக் ஆனார். இந்தப்பாட்டில் மாளவிகாவின் டான்சும், வெட்டும் ரசிகர்களை கட்டிப் போட்டுவிட்டது.பாடலுக்கேத்த மாதிரி மீன் போல துள்ளி விளையாடினார் மாளவிகா.மீன் பாட்டின் வெற்றியால் ஏகப்பட்ட வாய்ப்புகள் மாளவிகாவுக்கு வந்தவண்ணம்உள்ளதாம். எல்லாம் குத்துப் பாட்டுக்களாக இருப்பதால் இதை எப்படி டீல் செய்வதுஎன்று குழம்பிப் போயுள்ளாராம் அம்மணி.பேசாமல் குத்தியே கோலிவுட்டில் காலத்தை கடத்தி விடலாமா என்று பலமாகயோசித்து வருகிறாராம் மாளவிகா.இந்த யோசனைக்கு மத்தியில் வெடக்கோழி என்ற படத்தில் ஹீரோ விமலுடன் சேர்ந்துஒரு குத்துப் பாட்டில் குத்திக் குதறியுள்ளார். இதில் வெடக்கோழிாக (ஹீரோயினாக) நடிப்பதுமும்தாஜ்.

    By Staff
    |

    சித்திரம் பேசுதடி படத்தில் வாளை மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் கல்யாணம் என்றகானா பாட்டுக்கு செம குத்து குத்திய மாளவிகாவுக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் வந்துகுவிய ஆரம்பித்துள்ளது.

    அத்தனையும் அட்டகாச குத்து என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல்சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயுள்ளார் மாளவிகா.

    சென்னையின் பிரபலமான கானா பாட்டுக்காரர் கானா லோகநாதன். ஏற்கனவே சிலபடங்களில் மீன்களை அடிப்படையாக வைத்து கானாப் பாட்டுக்களை எழுதிப்பாடியிருந்தாலும், சித்திரம் பேசுதடியில் பாடிக் கொண்டே நடித்தும் அசத்தியிருக்கிறார்லோகநாதன்.

    கருப்பு உருவம், கண்ணை அடிக்கும் மஞ்சள் ஜிகினா சட்டை, பட்டு வேட்டி,இரவிலும் ஒரு கூலிங் கிளாஸ், சலூன் கடைகளில் மாடலுக்கு வைத்திருப்பார்களே..அது மாதிரியான அந்தக் கால டிஸ்கோ ஹேர் ஸ்டைல், கையில் ஒரு பிரேஸ்லெட்,


    வெள்ளை செருப்பு சகிதம் உடம்பை ஸ்டிப்பாக வைத்துக் கொண்டு, ஆற்காடுவீராசாமி மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு, இரண்டு மணிக்கட்டுகளை மட்டும்ஆட்டி ஆட்டி, டிஎம்எஸ்-மசிேயா வாசுதேவன் குரலை கலந்து குல்பி ஐஸ் குரலில்

    இவர் பாடி நடித்த வாளை மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் தான்இப்போது எல்லா டிவிக்களிலும் டாப் டென்னில் முதலிடத்தில் நங்கூரம் பாய்ச்சிநிற்கிறது.

    கூடவே பாடலில் இவருக்கு மைக் பிடிக்க ஒரு அக்குணி.. லோகநாதனை விட அதிகஸ்டிப்பாக, மைக்கை முறைத்தபடியே நிற்க, களை கட்டியது பாட்டு.

    இந்த இருவரும் பாடலுக்கு அழகு சேர்க்க, காட்சிக்கு அழகு சேர்த்தார் மாளவிகா. மஞ்சள் சேலையை ஏத்திக்கட்டி, அங்கம் எல்லாம் சேத்துக் காட்டி, குதித்துக் குதித்து மெட்டுக்கு ஏத்தபடி வெட்டி, வெட்டி குத்தாட்டம்போட்டார் மாளவிகா.


    பாடலை படமாக்கிய விதமும் ரொம்ப புதுமையாக இருக்க, செம பேமஸாகிவிட்டது வாளை மீனுக்கும்..வெலங்கு மீனுக்கும்...பாட்டு. லோகநாதன் பாடும் தோரணையைப் பார்ப்பதா? சைடில் குத்தி எடுக்கும்மாளவிகாவைப் பார்ப்பதா? என்று பாடலைப் பார்க்கும் அனைவரையும் சந்தோஷமாய் குழப்பியது பாடல்

    தொலைக்காட்சி சேனலை திருப்பினாலும் வாளை மீன் பாட்டுதான்.

    இந்த ஒரே பாட்டின் மூலம் மறுஜென்மம் எடுத்துவிட்டார் மாளவிகா.

    ஹீரோயினாக ஒரு காலத்தில் கோலிவுட்டை வலம் வந்த மாளவிகா திடீரெனஇந்திக்குப் போனார். அங்கு சியூஅட் 9 என்ற படத்தில் பலான காட்சிகளில்பயங்கரமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.


    அதே வேகத்தில் சித்திரம் பேசுதடியில் வாளை மீன் பாட்டுக்கு புக் ஆனார். இந்தப்பாட்டில் மாளவிகாவின் டான்சும், வெட்டும் ரசிகர்களை கட்டிப் போட்டுவிட்டது.

    பாடலுக்கேத்த மாதிரி மீன் போல துள்ளி விளையாடினார் மாளவிகா.

    மீன் பாட்டின் வெற்றியால் ஏகப்பட்ட வாய்ப்புகள் மாளவிகாவுக்கு வந்தவண்ணம்உள்ளதாம். எல்லாம் குத்துப் பாட்டுக்களாக இருப்பதால் இதை எப்படி டீல் செய்வதுஎன்று குழம்பிப் போயுள்ளாராம் அம்மணி.

    பேசாமல் குத்தியே கோலிவுட்டில் காலத்தை கடத்தி விடலாமா என்று பலமாகயோசித்து வருகிறாராம் மாளவிகா.

    இந்த யோசனைக்கு மத்தியில் வெடக்கோழி என்ற படத்தில் ஹீரோ விமலுடன் சேர்ந்துஒரு குத்துப் பாட்டில் குத்திக் குதறியுள்ளார். இதில் வெடக்கோழிாக (ஹீரோயினாக) நடிப்பதுமும்தாஜ்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X