Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஜோதிர்மயி-கேப்டன்-மாளவிகா தர்மபுரி படத்தைத் தொடர்ந்து விஜயகாந்த் நடிக்கப் போகும் படத்திற்கு சபரி என்றுபெயர் சூட்டியுள்ளனர். இதில் விஜயகாந்த்துக்கு இரண்டு ஜோடிகளாம்.கஜினி என்ற பிரமாண்டப் படத்தைத் தயாரித்த சேலம் சந்திரசேகரன் அடுத்துதயாரிக்கும் படம்தான் சபரி. இந்தப் படத்தையும் மிகுந்த பொருட்செலவில்தயாரிக்கிறார் சந்துரு.கேப்டன் தான் ஹீரோ. இதில் அரசியலை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுநடிக்கப் போகிறாராம் விஜய்காந்த். படு வித்தியாசமான அதாவது புரட்சிகரமானடாக்டராக வருகிறாராம்.இப்படி ஒரு டாக்டர் ஊருக்கு ஒருத்தர் இருந்தா சமுதாயம் ஓஹோன்னு மாறி விடும்என்று நினைக்கும் அளவுக்கு அதிரடியான டாக்டராக வருகிறாராம் விஜயகாந்த்.படத்தில் தலைவருக்கு 2 ஜோடிகள். ஒருத்தர் ஜோதிர்மயி, இன்னொருத்தர் மாளவிகா.பெரியார் படத்தைத் தவிர ஜோதிர் மயிக்கு பெரிதாகப் படங்கள் இல்லை. சுமமாகிடந்த அவரிடம் கேப்டனுடன் ஜோடி போடவர்ரியளா என்று கேட்க உடனே ஆட்டிவிட்டாராம் தலையை.அதேபோல மாளவிகாவிடமும் கேட்க அவரும் ஓ.கே. சொல்லியுள்ளார்.இப்படத்திற்கு கிரைம் கதை மன்னன் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.மணிசர்மா இசையமைக்கிறார்.படத்தை இயக்குபவர் சுரேஷ். இவர் சரத்குமார் நடித்த அரசு, கம்பீரம் ஆகியபடங்களை இயக்கியவர் தான். இவரை விஜய்காந்துக்கு ரெக்கமண்ட் செய்ததேசரத்குமார் தானாம்.சபரியில் அரசியல் சுத்தமாக இருக்காதாம். ஆனால் சமுதாயத்துக்குத் தேவையானகருத்துக்கள் எக்கச்சக்கமாக இருக்குமாம். இதற்காக பக்கம் பக்கமாக பக்காவாகவசனம் எழுதிக் கொணடிருக்கிறார்களாம்.டாக்டர் ஊசி போடுற நேரத்தை விட பேசுற நேரம் ரொம்ப அதிகமா இருக்குமாம்.அரசியல் இல்லாவிட்டாலும் கூட விஜயகாந்த்தின் புருவச்சுழிப்பு, கண் கொதிப்பு,வாய் கடிப்பு, நாடி புடைப்பு, அடிக்குரல் வசனம் ஆகிய வழக்கமான ஐட்டங்கள்எல்லாம் கட்டாயம் இருக்கும் என நம்பலாம்.சமீபத்தில் படத்துக்கான ஸ்டில் செஷன் நடந்தது. ஸ்டில்களைப் பார்த்தால் ஜோதிர்மயிக்கு வெயிட்டான ரோல்என்று தெரிகிறது. மாளவிகா குத்தாட்டத்துக்கு வந்து போவார் போல.அரசியலில் தீவிரமாகி விட்டதால் இனிமேல் சொந்தப் படங்களில் மட்டும்தான்நடிப்பேன் என்றுமுன்பு கூறியிருநதார் விஜயகாந்த். ஆனால் இப்போது வெளிப்படங்களில் அதிக அளவில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.இதற்குப் பின்னணி என்ன என்று விசாரித்தபோது, உள்ளாட்சித் தேர்தலில் கொட்டிவிட டப்பு ரொம்ப தேவை என்பதால்தான் ஏகப்பட்ட படங்களை வாரிப் போட்டுக்கொண்டு அட்வான்ஸை வாங்கிக் குவிக்கத் தொடங்கியிருக்கிறார் விஜயகாந்த்என்கிறார்கள்.அப்படியா விஷயம்?
கஜினி என்ற பிரமாண்டப் படத்தைத் தயாரித்த சேலம் சந்திரசேகரன் அடுத்துதயாரிக்கும் படம்தான் சபரி. இந்தப் படத்தையும் மிகுந்த பொருட்செலவில்தயாரிக்கிறார் சந்துரு.
கேப்டன் தான் ஹீரோ. இதில் அரசியலை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுநடிக்கப் போகிறாராம் விஜய்காந்த். படு வித்தியாசமான அதாவது புரட்சிகரமானடாக்டராக வருகிறாராம்.
இப்படி ஒரு டாக்டர் ஊருக்கு ஒருத்தர் இருந்தா சமுதாயம் ஓஹோன்னு மாறி விடும்என்று நினைக்கும் அளவுக்கு அதிரடியான டாக்டராக வருகிறாராம் விஜயகாந்த்.
படத்தில் தலைவருக்கு 2 ஜோடிகள். ஒருத்தர் ஜோதிர்மயி, இன்னொருத்தர் மாளவிகா.பெரியார் படத்தைத் தவிர ஜோதிர் மயிக்கு பெரிதாகப் படங்கள் இல்லை. சுமமாகிடந்த அவரிடம் கேப்டனுடன் ஜோடி போடவர்ரியளா என்று கேட்க உடனே ஆட்டிவிட்டாராம் தலையை.
அதேபோல மாளவிகாவிடமும் கேட்க அவரும் ஓ.கே. சொல்லியுள்ளார்.இப்படத்திற்கு கிரைம் கதை மன்னன் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.மணிசர்மா இசையமைக்கிறார்.
படத்தை இயக்குபவர் சுரேஷ். இவர் சரத்குமார் நடித்த அரசு, கம்பீரம் ஆகியபடங்களை இயக்கியவர் தான். இவரை விஜய்காந்துக்கு ரெக்கமண்ட் செய்ததேசரத்குமார் தானாம்.
சபரியில் அரசியல் சுத்தமாக இருக்காதாம். ஆனால் சமுதாயத்துக்குத் தேவையானகருத்துக்கள் எக்கச்சக்கமாக இருக்குமாம். இதற்காக பக்கம் பக்கமாக பக்காவாகவசனம் எழுதிக் கொணடிருக்கிறார்களாம்.
டாக்டர் ஊசி போடுற நேரத்தை விட பேசுற நேரம் ரொம்ப அதிகமா இருக்குமாம்.
அரசியல் இல்லாவிட்டாலும் கூட விஜயகாந்த்தின் புருவச்சுழிப்பு, கண் கொதிப்பு,வாய் கடிப்பு, நாடி புடைப்பு, அடிக்குரல் வசனம் ஆகிய வழக்கமான ஐட்டங்கள்எல்லாம் கட்டாயம் இருக்கும் என நம்பலாம்.
சமீபத்தில் படத்துக்கான ஸ்டில் செஷன் நடந்தது. ஸ்டில்களைப் பார்த்தால் ஜோதிர்மயிக்கு வெயிட்டான ரோல்என்று தெரிகிறது. மாளவிகா குத்தாட்டத்துக்கு வந்து போவார் போல.
அரசியலில் தீவிரமாகி விட்டதால் இனிமேல் சொந்தப் படங்களில் மட்டும்தான்நடிப்பேன் என்றுமுன்பு கூறியிருநதார் விஜயகாந்த். ஆனால் இப்போது வெளிப்படங்களில் அதிக அளவில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.
இதற்குப் பின்னணி என்ன என்று விசாரித்தபோது, உள்ளாட்சித் தேர்தலில் கொட்டிவிட டப்பு ரொம்ப தேவை என்பதால்தான் ஏகப்பட்ட படங்களை வாரிப் போட்டுக்கொண்டு அட்வான்ஸை வாங்கிக் குவிக்கத் தொடங்கியிருக்கிறார் விஜயகாந்த்என்கிறார்கள்.
அப்படியா விஷயம்?