twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மைக்கேல் ஜாக்சனின் தோல் மருத்துவரிடம் விசாரிக்க நீதிமன்ற தடை

    |

    Michael Jackson
    லாஸ் ஏஞ்சல்ஸ்: மைக்கேல் ஜான்சனின் இறப்பு வழக்கில், அவரது தோல் டாக்டரையும் சேர்த்து விசாரிக்க, லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் தடைவிதித்தது.

    பிரபல பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சன் இறப்பிற்கு அதிக அளவில் அளிக்கப்பட்ட தூக்க மாத்திரையே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பாக, அவரது டாக்டர் கன்ராடு முரேயிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது, மைக்கேல் ஜான்சன் பல முறை தோல் அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில், தோல் நிபுணராக டாக்டர் அர்னால்டு கெலீன் என்பவரிடமும் விசாரிக்க வேண்டும் என, முரேயின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

    ஆனால், இதற்கு நீதிபதி மறுத்துவிட்டார். முன்னதாக, ஜாக்சனின் இறப்பு வழக்கில், சாட்சியளித்த மற்றோரு டாக்டரான ஆடம்ஸ், 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜான்சனுக்கு சிகிச்சை மேற்கொண்டு வந்தவர் முரே. அவரது இறப்பிற்கு 2 மாதங்களுக்கு முன்வரை முரே தான் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

    பிரோப்போபோல் மருந்தை, ஜான்சன் விரும்பி உட்கொண்டு வந்தார். அதை அவர் செல்லமாக பால் என்றே அழைப்பார். இந்த மருந்தை தருமாறு, ஜாக்சன் பலமுறை முரேயிடம் கேட்டுள்ளார். என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    மைக்கேல் ஜான்சனின் வழக்கில் சிக்கியுள்ள டாக்டர் முரேயின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது. அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 8ம் தேதி நடைபெற உள்ளது.

    English summary
    The judge in the upcoming trial of Michael Jackson's long-time dermatologist, Dr Arnold Klein has ruled that witnesses will not be allowed to testify about the pop star's case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X