Don't Miss!
- News அஜித்திற்கு முன்பே நான் வந்துவிட்டேன்.. ஆனால்.. வாக்குச்சாவடியில் போலீசிடம் ஆதங்கப்பட்ட முதியவர்
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Finance ஏசி இல்லாம வெளியே போகமாட்டேன்னு சொல்றவங்களா நீங்க? உங்களுக்கு தான் இந்த அப்டேட்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மிதுனா மிதுனா! வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் காமடி செய்துள்ள நடிகர்சிங்கமுத்துவின் மகன் கீர்த்திவாசன் ஹீரோவாக நடிக்க டிப்டாப் என்ற படம்உருவாகிறது. கீர்த்திக்கு ஜோடி போடுபவர் மிருதுவான மிதுனா.வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வடிவேலுவின் எண்ணற்ற நகைச்சுவைக் காட்சிகளில்தவறாமல் இடம் பெற்றிருப்பவர் சிங்கமுத்து. இவரது பெயரைச் சொன்னால் நிறையபேருக்குத் தெரியாது. ஆனால் இவர் நடித்த காட்சிகளைக் கூறினால் சட்டென்றுகுலுங்கி விடுவார்கள்.வின்னர் படத்தில் நாயகி கிரணின் வீட்டுக்குள் இரவு வடிவேலு செல்லும்போது,அங்கிட்டு வேண்டாம், இங்கிட்டு போவோம் என்று வடிவேலுவுக்கு வழிகாட்டியபடிவருவாரே ஒரு களவாணி, அவர்தான் சிங்கமுத்து.அந்த சிங்கமுத்து பெற்ற சிங்கம் தான் கீர்த்திவாசன். எம்எஸ்சி ஐடி படித்தகீர்த்திவாசன், ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலையில்இருந்தவர்.ஆனால், புள்ளக்கி வேலையில் நாட்டம் இல்லை. சினிமால நடிப்பேன் என்று புள்ளைஏங்க, அப்பாவின் உதவியோடு நாயகனாக உருவாகியிருக்கிறார்.அவர் நடிக்கும் முதல் படம் டிப் டாப். இதன் பட பூஜை பிரசாத் ஸ்டூடியோவில்நடந்தது.நிகழ்ச்சியில் மகன் கீர்த்திவாசனை பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தசிங்கமுத்து, செந்தில் போன்ற நடிகர்கள் தங்களது பிள்ளைகளை கதாநாயகர்களாகஅறிமுகப்படுத்தியுள்ளனர். செந்தில் அளவுக்கு நான் பெரிய காமடியன் இல்லை.அதனால்தான் எனது மகனை பெரிய அளவில் விளம்பரம் செய்து அறிமுகப்படுத்தமுடியவில்லை.எனது மகனுக்கு கடவுள் அருள் இருந்தால் அவன் தொடர்ந்து நடிப்பான்.இல்லையென்றால் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் சாப்ட்வேர் தொழிலுக்கேபோய் விடுவான் என்றார் அடக்கமாக.கீர்த்திவாசன் முகத்தில்தான் இன்னும் பசும்பால் லேசாக வடிந்து கொண்டிருக்கிறது.இவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பவர் மிதுனா என்ற இளமைப் புயல். இந்தப்புயலுக்கு முன்பு கீர்த்தி வாசன் ஸ்டெடியாக நின்று விட்டாலே படம் பாதி வெற்றிபெற்று விடும். அந்த அளவுக்கு கட்டுமஸ்தாக இருக்கிறார் மிதுனா.கீர்த்திவாசனை ஆக்ஷன் ஹீரோவாக காட்டப் போகிறாராம் இயக்குனர்கே.கே.கிருஷ்ணன். கீர்த்திக்கு பைட் செய்ய வருமாம், டான்ஸும் தெரியுமாம்(நடிக்கத் தெரியுமா?). எனவே இரண்டையும் கலந்து கீர்த்தியை சூப்பர் ஹீரோவாககாட்டப் போகிறேன் என்கிறார் கிருஷ்ணன்.அதேசமயம், மிதுனாவின் கிளாமருக்கு படத்தில் நிறைய வேலை இருக்குமாம்.அதற்கு மிதுனா ரொம்பவே தயாராக இருக்கிறார்.செம கெட்டப்பில் பூஜைக்கு வந்த மிதுனாவிடம், நடிப்பு வருமா என்று கேட்டால்சிரித்தார். கிளாமர் என்று கேட்டால், அட பின்னே அது இல்லாமலா.. என்றார்.படத்தில் சிங்கமுத்துவும் நடிக்கிறாராம். அதேபோல அவரது மதிப்புக்குரிய வைகைப்புயல் வடிவேலு, கருணாஸ், சீதா ஆகியோரும் இருக்கிறார்கள். இசைஞானியின்புதல்வன் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.பட பூஜையின்போதே தனது முதல் பாடலை கம்போசிங் செய்து காட்டி அசத்தினார்கார்த்திக்.
வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் காமடி செய்துள்ள நடிகர்சிங்கமுத்துவின் மகன் கீர்த்திவாசன் ஹீரோவாக நடிக்க டிப்டாப் என்ற படம்உருவாகிறது. கீர்த்திக்கு ஜோடி போடுபவர் மிருதுவான மிதுனா.
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வடிவேலுவின் எண்ணற்ற நகைச்சுவைக் காட்சிகளில்தவறாமல் இடம் பெற்றிருப்பவர் சிங்கமுத்து. இவரது பெயரைச் சொன்னால் நிறையபேருக்குத் தெரியாது. ஆனால் இவர் நடித்த காட்சிகளைக் கூறினால் சட்டென்றுகுலுங்கி விடுவார்கள்.
வின்னர் படத்தில் நாயகி கிரணின் வீட்டுக்குள் இரவு வடிவேலு செல்லும்போது,அங்கிட்டு வேண்டாம், இங்கிட்டு போவோம் என்று வடிவேலுவுக்கு வழிகாட்டியபடிவருவாரே ஒரு களவாணி, அவர்தான் சிங்கமுத்து.
அந்த சிங்கமுத்து பெற்ற சிங்கம் தான் கீர்த்திவாசன். எம்எஸ்சி ஐடி படித்தகீர்த்திவாசன், ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலையில்இருந்தவர்.
ஆனால், புள்ளக்கி வேலையில் நாட்டம் இல்லை. சினிமால நடிப்பேன் என்று புள்ளைஏங்க, அப்பாவின் உதவியோடு நாயகனாக உருவாகியிருக்கிறார்.
அவர் நடிக்கும் முதல் படம் டிப் டாப். இதன் பட பூஜை பிரசாத் ஸ்டூடியோவில்நடந்தது.
நிகழ்ச்சியில் மகன் கீர்த்திவாசனை பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தசிங்கமுத்து, செந்தில் போன்ற நடிகர்கள் தங்களது பிள்ளைகளை கதாநாயகர்களாகஅறிமுகப்படுத்தியுள்ளனர். செந்தில் அளவுக்கு நான் பெரிய காமடியன் இல்லை.அதனால்தான் எனது மகனை பெரிய அளவில் விளம்பரம் செய்து அறிமுகப்படுத்தமுடியவில்லை.
எனது மகனுக்கு கடவுள் அருள் இருந்தால் அவன் தொடர்ந்து நடிப்பான்.இல்லையென்றால் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் சாப்ட்வேர் தொழிலுக்கேபோய் விடுவான் என்றார் அடக்கமாக.
கீர்த்திவாசன் முகத்தில்தான் இன்னும் பசும்பால் லேசாக வடிந்து கொண்டிருக்கிறது.
இவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பவர் மிதுனா என்ற இளமைப் புயல். இந்தப்புயலுக்கு முன்பு கீர்த்தி வாசன் ஸ்டெடியாக நின்று விட்டாலே படம் பாதி வெற்றிபெற்று விடும். அந்த அளவுக்கு கட்டுமஸ்தாக இருக்கிறார் மிதுனா.
கீர்த்திவாசனை ஆக்ஷன் ஹீரோவாக காட்டப் போகிறாராம் இயக்குனர்கே.கே.கிருஷ்ணன். கீர்த்திக்கு பைட் செய்ய வருமாம், டான்ஸும் தெரியுமாம்(நடிக்கத் தெரியுமா?). எனவே இரண்டையும் கலந்து கீர்த்தியை சூப்பர் ஹீரோவாககாட்டப் போகிறேன் என்கிறார் கிருஷ்ணன்.
அதேசமயம், மிதுனாவின் கிளாமருக்கு படத்தில் நிறைய வேலை இருக்குமாம்.அதற்கு மிதுனா ரொம்பவே தயாராக இருக்கிறார்.
செம கெட்டப்பில் பூஜைக்கு வந்த மிதுனாவிடம், நடிப்பு வருமா என்று கேட்டால்சிரித்தார். கிளாமர் என்று கேட்டால், அட பின்னே அது இல்லாமலா.. என்றார்.
படத்தில் சிங்கமுத்துவும் நடிக்கிறாராம். அதேபோல அவரது மதிப்புக்குரிய வைகைப்புயல் வடிவேலு, கருணாஸ், சீதா ஆகியோரும் இருக்கிறார்கள். இசைஞானியின்புதல்வன் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
பட பூஜையின்போதே தனது முதல் பாடலை கம்போசிங் செய்து காட்டி அசத்தினார்கார்த்திக்.
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!