Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
துணை நடிகையை தாக்கிய நவ்யா-சேரன் மாயக்கண்ணாடி படப்பிடிப்பின்போது நவ்யா நாயருக்கும், துணை நடிகை பிரியா என்பவருக்கும் இடையேபெரிய அடிதடி நடந்தது. நவ்யாவுக்கு ஆதரவாக துணை நடிகையை இயக்குனர் சேரனும் முதுகில் குத்தினார்.இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டே பரபரப்புக்குள்ளானது.சேரன் இயக்கத்தில் உருவாகும் மாயக்கண்ணாடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நவ்யா. சலூன்கடை வைத்திருப்பவராக சேரனும், பியூட்டி பார்லர் நடித்துபவராக நவ்யாவும் நடிக்கின்றனர்.சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. தி.நகரில் நவ்யா நாயர், சில துணை நடிகைகள்சம்பந்தப்பட்ட காட்சி படமாக்கப்பட்டன.சூட்டிங் இடைவெளியின்போது பிரியா என்ற துணை நடிகை செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவரைக்கூப்பிட்ட நவ்யா, செல்போனை ஆஃப் செய்.. சூட்டிங் ஸ்பாட்டில் யாரும் செல்போனில் பேசக் கூடாது என்றுடைரக்டர் சொல்லிருக்கிறார் என்று கூறியுள்ளார்.இதனால் பிரியாவுக்கும் கோபம் ஏறி விட்டது. நான் சூட்டிங் இடைவெளியில் தானே பேசினேன். நான்பேசுவதை நிறுத்தச் சொல்ல நீ யார்? நீ என்ன டைரக்டரா என்று கோபமாக பதில் கேள்வி கேட்டுள்ளார் பிரியா.இதையடுத்து சேரனிடம் ஓடிய நவ்யா, பிரியா மீது புகார் தந்துள்ளார். இதையடுத்து ப்ரியாவை அழைத்த சேரன்,நவ்யாவிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளார்.நான் ஏன் இவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நவ்யாவை பிரியா முறைக்கவே, அவரைஅறைந்துள்ளார் நவ்யா. இதையடுத்து பிரியாவும் நவ்யாவுக்கு கன்னத்தில் ஒரு பளார் விட்டார். இதையடுத்தஇருவருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது.சீனியர் நடிகையையே அடிக்கிறாரா என்று கேட்டபடி, பிரியாவின் முதுகில் அடித்துள்ளார் சேரன். கடுப்பானபிரியா, நடிகைன்னா எல்லோரும் ஒண்ணு தான் என்று சொல்லிபடி சேரனை பதிலுக்கு அடிக்கப் பாய்ந்துள்ளார்.இதனால் சூட்டிங் ஸ்பாட்டே களேபரமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பிரியா மீது போலீசில் புகார் கொடுக்கசேரன் முயற்சித்துள்ளார். ஆனால், அவரை தடுத்த அவரது நண்பர்கள், போலீசுக்கு போனால் ரொம்பஅசிங்கமாகிவிடும். இதனால் மூன்று பேரும் சமாதானமாகப் போய்விடுங்கள் என்று அறிவுறுத்தினர்.இதையடுத்து போலீசுக்குப் போவதை சேரன் தவிர்த்துவிட்டதாகத் தெரிகிறது. நமக்குள்ளேயே சமாதானமாகப்போய்விடலாம் என சேரன் கூறியதை பிரியா ஏற்றுக் கொண்டுவிட்டார்.ஆனால், நவ்யா நாயர் மட்டும் கோபித்துக் கொண்டு கேரளாவுக்கு பிளேன் ஏறிவிட்டார்.ஏற்கனவே மலையாளப் படம் ஒன்றின் ஷூட்டிங்கின்போதும் நவ்யா நாயருக்கும், கூட நடிக்கும் ஹீரோயின்ஒருவருக்கும் இடையே அடிதடி நடந்ததாக செய்திகள் வந்தன.இப்போது துணை நடிகையுடன் கும்மாங்குத்து சண்டை போட்டுள்ளார் நவ்யா.நவ்யாவுக்கு என்னாச்சு?
சேரன் இயக்கத்தில் உருவாகும் மாயக்கண்ணாடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நவ்யா. சலூன்கடை வைத்திருப்பவராக சேரனும், பியூட்டி பார்லர் நடித்துபவராக நவ்யாவும் நடிக்கின்றனர்.
சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. தி.நகரில் நவ்யா நாயர், சில துணை நடிகைகள்சம்பந்தப்பட்ட காட்சி படமாக்கப்பட்டன.
சூட்டிங் இடைவெளியின்போது பிரியா என்ற துணை நடிகை செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவரைக்கூப்பிட்ட நவ்யா, செல்போனை ஆஃப் செய்.. சூட்டிங் ஸ்பாட்டில் யாரும் செல்போனில் பேசக் கூடாது என்றுடைரக்டர் சொல்லிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
இதனால் பிரியாவுக்கும் கோபம் ஏறி விட்டது. நான் சூட்டிங் இடைவெளியில் தானே பேசினேன். நான்பேசுவதை நிறுத்தச் சொல்ல நீ யார்? நீ என்ன டைரக்டரா என்று கோபமாக பதில் கேள்வி கேட்டுள்ளார் பிரியா.
நான் ஏன் இவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நவ்யாவை பிரியா முறைக்கவே, அவரைஅறைந்துள்ளார் நவ்யா. இதையடுத்து பிரியாவும் நவ்யாவுக்கு கன்னத்தில் ஒரு பளார் விட்டார். இதையடுத்தஇருவருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது.
சீனியர் நடிகையையே அடிக்கிறாரா என்று கேட்டபடி, பிரியாவின் முதுகில் அடித்துள்ளார் சேரன். கடுப்பானபிரியா, நடிகைன்னா எல்லோரும் ஒண்ணு தான் என்று சொல்லிபடி சேரனை பதிலுக்கு அடிக்கப் பாய்ந்துள்ளார்.
இதனால் சூட்டிங் ஸ்பாட்டே களேபரமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பிரியா மீது போலீசில் புகார் கொடுக்கசேரன் முயற்சித்துள்ளார். ஆனால், அவரை தடுத்த அவரது நண்பர்கள், போலீசுக்கு போனால் ரொம்பஅசிங்கமாகிவிடும். இதனால் மூன்று பேரும் சமாதானமாகப் போய்விடுங்கள் என்று அறிவுறுத்தினர்.
ஆனால், நவ்யா நாயர் மட்டும் கோபித்துக் கொண்டு கேரளாவுக்கு பிளேன் ஏறிவிட்டார்.
ஏற்கனவே மலையாளப் படம் ஒன்றின் ஷூட்டிங்கின்போதும் நவ்யா நாயருக்கும், கூட நடிக்கும் ஹீரோயின்ஒருவருக்கும் இடையே அடிதடி நடந்ததாக செய்திகள் வந்தன.
இப்போது துணை நடிகையுடன் கும்மாங்குத்து சண்டை போட்டுள்ளார் நவ்யா.
நவ்யாவுக்கு என்னாச்சு?