Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சூட்டிங் ஸ்பாட்
கூத்துப் பட்டறை என பெயரிடப்பட்ட பின்னர் எல்லாமே டிராமா தான் என்று மாற்றப்பட்ட படத்தில் நடித்துவரும் மலையாள நடிகை நவ்யா நாயர் தீவிரமாக தமிழ் பயின்று வருகிறார்.
இந்தப் படத்தைத் தயாரித்துஇயக்கும் பிரகாஷ் ராஜ், நவ்யாவே தமிழில் பேசி நடிக்க வேண்டும் என்று கூறிவிட்டது தான் இதற்குக் காரணம்.
நம் ஊர் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கிரண்களையும் சிம்ரன்களையும் கொண்டு வந்து டப்பிங் மூலம்பேச வைத்து ஒப்பேற்றி வரும் நிலையில், கர்நாடகத்தைச் சேர்ந்தவரான பிரகாஷ் ராஜ், தன்னால் தமிழில்அறிமுகப்படுத்தப்படும் நடிகை தமிழிலேயே பேச வேண்டும் என்று முயற்சி எடுத்திருப்பது மிகவும்பாராட்டுக்குரியது.
தயாரிப்பாளரே சொல்லிவிட்டதால், ஆள் வைத்து தமிழ் டியூசன் படித்து வருகிறார் நவ்யா.
மேலும் அவருக்குபிரகாஷ் ராஜூம் தமிழ் சொல்லித் தருகிறார்.
தமிழில் பொளந்து கட்டும் பிரகாஷ் ராஜூக்கு கன்னடம் தவிர இந்தி, தெலுங்கு, துளு, கொங்கனி, மலையாளம்என சகல பாஷைகளும் தெரியும்.
* மணிரத்னத்தின் படத்தில் நடித்து வரும் திரிஷாவுக்கு அடுத்த லக் அடித்துள்ளது. ஷங்கர் அடுத்ததாக இயக்கஉள்ள படத்தில் ஹீரோயினாக புக் ஆகியுள்ளார். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள இந்தப் படத்தின்ஹீரோ விக்ரம். விக்ரம் ரெக்கமெண்டேசனில் தான் திரிஷாவுக்கு சான்ஸ் தரப்பட்டதாக சொல்கிறார்கள்.
பாய்ஸ் தோல்வியைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கு ஷங்கருக்கு பேசப்பட்ட சம்பளத்தில் பெரும் பகுதியைவெட்டிவிட்டாராம் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். அடி மேல் அடி என்பார்களே. அது இது தானா?
* விக்ரம் குறித்து இன்னொரு செய்தி. விக்ரமையும் சூர்யாவையும் வைத்து பிதாமகன் படத்தை எடுத்து வரும்இயக்குனர் பாலா, தான் அடுத்து எடுக்கப் போகும் படத்திலும் விக்ரமையே ஹீரோவாகப் போட முடிவுசெய்துள்ளாராம். படத்தின் கதை குறித்து வழக்கம் போலவே மெளனம் காக்கிறார் பாலா.