twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மயங்கி விழுந்த நயனதாரா! வல்லவன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை நயனதாரா மயங்கி விழுந்ததால்ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.சிம்புவின் இயக்கத்தில் உருவாகி வரும் வல்லவன் படப்பிடிப்பு ரொம்ப காலமாகநடந்து வருகிறது. இடையில் ரீமா சென்-சிம்பு மோதலால் படப்பிடிப்புபாதிக்கப்பட்டது. அப்பிரச்சினை தீர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடந்துவருகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்சிம்பு. பிரசாத் ஸ்டூடியோவில் சிம்பு, நயனதாரா, ரீமா சென் ஆகியோர் சம்பந்தப்பட்டகாட்சிகளை சிம்பு படமாக்கி வந்தார்.காலை 9 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை படப்பிடிப்புஇடைவிடாமல் நடந்து வந்தது. இதில் கலந்து கொண்டு நயனதாரா ஓய்வேஎடுக்காமல் நடித்து வந்தார்.நேற்று அதிகாலை 4 மணியளவில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரெனமயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.தண்ணீர் தெளித்து நயனதாராவை அங்கிருந்தவர்கள் தெளிவித்தனர். பின்னர் டாக்டர்வரவழைக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. அவருக்கு ஓய்வு தேவை எனடாக்டர் கூறியதால் படப்பிடிப்புத் தளத்திலிருந்து நயனதாரா தான் தங்கியிருந்தஹோட்டலுக்குப் போய் ஓய்வு எடுத்தார்.ஓய்வுக்குப் பின்னர் அவர் தெலுங்குப் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காகஹைதராபாத் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

    By Staff
    |

    வல்லவன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை நயனதாரா மயங்கி விழுந்ததால்ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

    சிம்புவின் இயக்கத்தில் உருவாகி வரும் வல்லவன் படப்பிடிப்பு ரொம்ப காலமாகநடந்து வருகிறது. இடையில் ரீமா சென்-சிம்பு மோதலால் படப்பிடிப்புபாதிக்கப்பட்டது. அப்பிரச்சினை தீர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடந்துவருகிறது.

    சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்சிம்பு. பிரசாத் ஸ்டூடியோவில் சிம்பு, நயனதாரா, ரீமா சென் ஆகியோர் சம்பந்தப்பட்டகாட்சிகளை சிம்பு படமாக்கி வந்தார்.


    காலை 9 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை படப்பிடிப்புஇடைவிடாமல் நடந்து வந்தது. இதில் கலந்து கொண்டு நயனதாரா ஓய்வேஎடுக்காமல் நடித்து வந்தார்.

    நேற்று அதிகாலை 4 மணியளவில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரெனமயக்கம் போட்டு விழுந்தார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

    தண்ணீர் தெளித்து நயனதாராவை அங்கிருந்தவர்கள் தெளிவித்தனர். பின்னர் டாக்டர்வரவழைக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. அவருக்கு ஓய்வு தேவை எனடாக்டர் கூறியதால் படப்பிடிப்புத் தளத்திலிருந்து நயனதாரா தான் தங்கியிருந்தஹோட்டலுக்குப் போய் ஓய்வு எடுத்தார்.


    ஓய்வுக்குப் பின்னர் அவர் தெலுங்குப் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காகஹைதராபாத் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X