ரிப்போர்ட்டர் நயனதாரா சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருடன் ஐயாவில் அறிமுகமான நயனதாரா, இப்போது சரத்தின் 100வது படமான தலைமகனில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். முதல் படத்தில போர்த்திக் கொண்டு நடித்த நயனதாரா, இப்போது குளிர்விட்டுப் போன நிலையில் துணிந்து போய் நடித்து வருகிறார். இதனால் முதல் படத்தில் மிஸ் பண்ணிவிட்டதை இந்தப் படத்தில் சேர்த்து வட்டியும், முதலுமாக வசூல் செய்துவிடும் முடிவில் இருக்கிறார் போலும் சரத்குமார். சரத்தின் தேவையை உணர்ந்து தலைமகனில் எக்ஸ்ட்ரீம் கவர்ச்சியில் காப்றா பண்ணி வருகிறார் நயனதாரா. முதல் படத்திலேயே படுவேகமாக பிக்கப் ஆகிப் போன நயனதாரா இப்போது கையில் தேதி இல்லாமல் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு தமிழ், தெலுங்கில் படு பிஸியாக ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கிறார். தலைமகனில் அவருக்கு நிருபர் வேடமாம். இந்த வேடத்தில் ஒன்றிப் போய் நடிக்க வேண்டும் என்பதற்காக சில பெண் நிருபர்களை வரவழைத்து அவர்களிடம் எப்படியெல்லாம் வேலை செய்வீர்கள், எப்படி பேட்டி எடுக்க வேண்டும், என்ன மாதிரியான கேள்விகள் எல்லாம் கேட்க வேண்டும் என்ற பத்திரிக்கைத் துறை நுணுக்கங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டாராம். இப்படி கேட்டுத் தெரிந்து கொண்டதன் விளைவாக அவருக்கு இப்போது ஜர்னலிசம் மீது காதலே பிறந்து விட்டதாம். அடடா, என்ன அருமையான துறை இது என்று வியந்து பேசும் நயனதாரா, இதில் பெண் நிருபர்கள் சந்திக்கும் சிக்கல்களையும் புரிந்து கொண்டு அடப் பாவமே இவ்வளவு சிரமப்பட்டா இவர்கள் வேலை செய்கிறார்கள் என்று பரிதாபப்படவும் செய்தாராம். அப்படியே தபால் மூலம் ஜர்னலிசம் படிக்கவும் முடிவு செய்துவிட்டாராம். நிச்சயமாக ஒரு நாள் நானும் பத்திரிக்கையாளர் ஆகி, கட்டுரை எல்லாம் எழுதப் போகிறேன் என்று பயம் காட்டுகிறார் நயன்ஸ் சேச்சி. சீக்கிரமே, அழகான மூக்கு கண்ணாடியைப் போட்டுக் கொண்டு, கையில் நோட்டு, பேனாவுடன் அழகிய நிருபராக நயனதாரா எங்காவது தென்படலாம்.. தலைமகன் படத்தைத் தயாரிப்பது சரத்குமாரின் வீட்டுக்காரம்மாவான ராதிகாவின் ராடன் மீடியா ஒர்க்ஸ் தான். படத்தை பாலாஜி என்பவர் இயக்குகிறார். இதில் பத்திரிக்கையின் ஆசிரியர் தீரன் என்ற கேரக்டரில் நடிக்கிறார் சரத்குமார். பத்திரிக்கையின் பெயர் எவரெஸ்ட்டாம். அவரிடம் நிருபராக வேலை பார்க்கிறாராம் நயனதாரா. கமர்கட்டு வாங்கி தந்தா.., காக்க கடி கடிச்சி தந்தா என்ற பாடலுக்கு சரத்குமாருடன் நயனதாரா போட்டுள்ள ஜல ஆட்டம், படம் பார்ப்பவர்களுக்கே ஜலதோஷம் பிடிக்க வைக்குமாம். அந்த அளவுக்கு சிக் உடையில் கிக் காட்டியிருக்கிறாராம் நயனதாரா. தமிழில் இந்தப் படம் தவிர நாகர்ஜூனாவுடன் ஒரு தெலுங்குப் படத்தில் புக் ஆகி இருக்கிறார் நயனதாரா. அங்கு இப்போது நயனதாரா வாங்கும் சம்பளம் என்ன தெரியுமோ.. ரூ. 40 லட்சம். அவருக்கு ரூ. 60 வரை கொட்டித் தரவும் தயாராக இருக்கிறார்களாம். தமிழிலும் இவரது சம்பளம் ரூ. 30தைத் தொட்டுவிட்டதாம்.

By Staff
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருடன் ஐயாவில் அறிமுகமான நயனதாரா, இப்போது சரத்தின் 100வது படமான தலைமகனில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.

முதல் படத்தில போர்த்திக் கொண்டு நடித்த நயனதாரா, இப்போது குளிர்விட்டுப் போன நிலையில் துணிந்து போய் நடித்து வருகிறார். இதனால் முதல் படத்தில் மிஸ் பண்ணிவிட்டதை இந்தப் படத்தில் சேர்த்து வட்டியும், முதலுமாக வசூல் செய்துவிடும் முடிவில் இருக்கிறார் போலும் சரத்குமார்.

சரத்தின் தேவையை உணர்ந்து தலைமகனில் எக்ஸ்ட்ரீம் கவர்ச்சியில் காப்றா பண்ணி வருகிறார் நயனதாரா.

முதல் படத்திலேயே படுவேகமாக பிக்கப் ஆகிப் போன நயனதாரா இப்போது கையில் தேதி இல்லாமல் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு தமிழ், தெலுங்கில் படு பிஸியாக ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கிறார்.

தலைமகனில் அவருக்கு நிருபர் வேடமாம். இந்த வேடத்தில் ஒன்றிப் போய் நடிக்க வேண்டும் என்பதற்காக சில பெண் நிருபர்களை வரவழைத்து அவர்களிடம் எப்படியெல்லாம் வேலை செய்வீர்கள், எப்படி பேட்டி எடுக்க வேண்டும், என்ன மாதிரியான கேள்விகள் எல்லாம் கேட்க வேண்டும் என்ற பத்திரிக்கைத் துறை நுணுக்கங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டாராம்.

இப்படி கேட்டுத் தெரிந்து கொண்டதன் விளைவாக அவருக்கு இப்போது ஜர்னலிசம் மீது காதலே பிறந்து விட்டதாம். அடடா, என்ன அருமையான துறை இது என்று வியந்து பேசும் நயனதாரா, இதில் பெண் நிருபர்கள் சந்திக்கும் சிக்கல்களையும் புரிந்து கொண்டு அடப் பாவமே இவ்வளவு சிரமப்பட்டா இவர்கள் வேலை செய்கிறார்கள் என்று பரிதாபப்படவும் செய்தாராம்.

அப்படியே தபால் மூலம் ஜர்னலிசம் படிக்கவும் முடிவு செய்துவிட்டாராம். நிச்சயமாக ஒரு நாள் நானும் பத்திரிக்கையாளர் ஆகி, கட்டுரை எல்லாம் எழுதப் போகிறேன் என்று பயம் காட்டுகிறார் நயன்ஸ் சேச்சி.

சீக்கிரமே, அழகான மூக்கு கண்ணாடியைப் போட்டுக் கொண்டு, கையில் நோட்டு, பேனாவுடன் அழகிய நிருபராக நயனதாரா எங்காவது தென்படலாம்..

தலைமகன் படத்தைத் தயாரிப்பது சரத்குமாரின் வீட்டுக்காரம்மாவான ராதிகாவின் ராடன் மீடியா ஒர்க்ஸ் தான். படத்தை பாலாஜி என்பவர் இயக்குகிறார். இதில் பத்திரிக்கையின் ஆசிரியர் தீரன் என்ற கேரக்டரில் நடிக்கிறார் சரத்குமார். பத்திரிக்கையின் பெயர் எவரெஸ்ட்டாம். அவரிடம் நிருபராக வேலை பார்க்கிறாராம் நயனதாரா.

கமர்கட்டு வாங்கி தந்தா.., காக்க கடி கடிச்சி தந்தா என்ற பாடலுக்கு சரத்குமாருடன் நயனதாரா போட்டுள்ள ஜல ஆட்டம், படம் பார்ப்பவர்களுக்கே ஜலதோஷம் பிடிக்க வைக்குமாம். அந்த அளவுக்கு சிக் உடையில் கிக் காட்டியிருக்கிறாராம் நயனதாரா.

தமிழில் இந்தப் படம் தவிர நாகர்ஜூனாவுடன் ஒரு தெலுங்குப் படத்தில் புக் ஆகி இருக்கிறார் நயனதாரா. அங்கு இப்போது நயனதாரா வாங்கும் சம்பளம் என்ன தெரியுமோ.. ரூ. 40 லட்சம். அவருக்கு ரூ. 60 வரை கொட்டித் தரவும் தயாராக இருக்கிறார்களாம்.

தமிழிலும் இவரது சம்பளம் ரூ. 30தைத் தொட்டுவிட்டதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X