Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நிவின்பாலி-அஞ்சலியின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் துவங்கியது... இயக்குநர் ராம்
சென்னை: அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது சிலம்பரசன் TR, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்கிற படத்தை மிகப் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
தனது திரையுலக பயணத்திலேயே மிகப்பெரிய படமாக இதை எதிர்பார்க்கிறார் சிலம்பரசன் TR..
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இதுவரை சுமார் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தூண்களாய் நின்ற இணை துணை இயக்குனர்கள் ...ஒரு படம் கற்று கொடுத்த பாடம்
தனுஷ்கோடியில்
இதனைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இயக்குநர் ராம் டைரக்ஷனில் தனது ஐந்தாவது படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.பல ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் செலஃபீ எடுத்து வருகின்றனர்.இன்னொரு பக்கம் இந்த அற்புதமான லொகேஷன்ஸை தனித்துவமாக காட்ட இந்த குழு பிரத்யேகமாக மெனக்கெடுகிறது .
மூன்றாவது முறையாக
மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்க, அஞ்சலி கதாநாயகியாக நடிக்கின்றார். கற்றது தமிழ், பேரன்பு படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ராம் இயக்கத்தில் நடிக்கிறார் அஞ்சலி. அஞ்சலியின் கண்கள் இயக்குனர் ராம் இயக்கத்தில் எப்பொழுதுமே தனித்துவமாக தெரியும் . உணர்வுபூர்வமான காட்சிகள் ரசனை மிகுந்த வசனங்கள் என்று அஞ்சலிக்கு ராம் படம் என்றால் அது எப்பொழுதும் ஸ்பெஷல் தான்.
தேசிய விருதை
மேலும் இந்தப்படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கலை வடிவமைப்பை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார். மக்கள் தொடர்பு : A. ஜான் என ஒட்டுமொத்தமாக தரமான படங்களை இயக்கி, தேசிய விருதும் பெற்ற இயக்குநர் ராமின் இந்த புதிய படைப்பும் தேசிய விருதை வரவழைத்து தரும் என எதிர்பார்க்கபடுகிறது .
பேசியது மட்டுமல்லாமல்
தமிழ் சினிமாவில் இயக்குனர் ராம் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். இயக்குனராக இயக்கிய படங்கள், நடிகராக நடித்த படங்கள் மற்ற இயக்குனர்களுக்கு உதவி செய்த படங்கள் என்று பல வகையில் தனது திறமைகளை வெளிப்படுத்தி மிகவும் எதார்த்தமாக பழகி நேர்மையான சமூக அக்கறையுடன் பல மேடைகளில் பேசியது மட்டுமல்லாமல் அதுபோலவே காட்சிகளையும் வடிவமைத்து தனக்குண்டான டார்கெட் ஆடியன்சை பெற்றுள்ளார்.