பாட்டெழுத சென்றபோது படகு கவிழ்ந்து கடலில் விழுந்த சினேகன்!

பிரபல சினிமா பாடலாசிரியர் சினேகன். 'உயர்திரு 420' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஆனாலும் பாட்டெழுதுவதைத் தொடர்கிறார். இப்போது ரணம் என்ற படத்துக்கு பாடல் எழுதுகிறார் சினேகன். இப்படத்தின் பாடலை உருவாக்க இசையமைப்பாளர் மரியா மனோகர், இயக்குனர் விஜய் சேகரன், ஆகியோருடன் சினேகன் மலேசியா அருகில் உள்ள லங்காவி தீவுக்கு சென்றார்.
அங்கு படகில் பயணம் செய்தபோது திடீரென்று படகு கவிழ்ந்தது. சினேகன் கடலில் மூழ்கி தத்தளித்தார். நீச்சல் தெரிந்ததால் உயிர் தப்பினார். படகில் பயணம் செய்து மூழ்கிய இதர பயணிகள் சிலரையும் சினேகன் காப்பாற்றினார். தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று பயணிகளை மீட்டனர்.
Comments


Click it and Unblock the Notifications