twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நழுவிய துப்பட்டா: போக்கிரி கலாட்டா! போக்கிரி படப்பிடிப்பின் போது விபரீத நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. பிரபுதேவா இயக்கத்தில், விஜய், அசின் நடிப்பில் வளர்ந்து வருகிறது போக்கிரி. சமீபத்தில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர். பிரபுதேவா தான் அந்தக்காட்சிக்கு டான்ஸ் வடிவமைத்திருந்தார். விஜய்யுடன் இரண்டு நடனப் பெண்கள்உடன் ஆடினர். வித்தியாசமாக இருக்கட்டுமே என்று வெறும் துப்பட்டாவை மட்டும்அப்பெண்களின் உடலில் ஆடை போல சுற்றி ஆட விட்டார்கள்.வெறும் துப்பட்டாவை மட்டும் ஆடையாக வைத்து ஆடினால், துப்பட்டாநழுவிவிடுமே என்று பிரபுதேவாவிடம் அந்த நடனப் பெண்கள் அச்சம்தெரிவித்துள்ளனர். ஆனால் அப்படியெல்லாம் ஆகாது என்று கூறி அவர்களைதுப்பட்டாவுடன் ஆட விட்டுள்ளார் பிரபுதேவா.அந்தப் பெண்கள் நினைத்தபடியே நடந்து விட்டது. சுற்றிலும் ஏராளமான ஆண்கள்குழுமியிருக்க துப்பட்டாவுடன் அப்பெண்கள் சுழன்று சுழன்று ஆடிய போது, திடீரெனஇருவரும் அணிந்திருந்த துப்பட்டா நழுவி விட்டது.இதனால் யூனிட்டே அதிர்ச்சியில் மூழ்கி விட்டது.அதை விட அந்த இரு பெண்களும் கூசிப் போய் விட்டனர். விழுந்த துப்பட்டாவைஎடுத்து உடலை மூடியபடி இருவரும் டிரஸ்ஸிங் ரூமுக்கு ஓடினர். பின்னாலேயே ஓடிய பிரபு தேவா, ஸாரிம்மா, இதை நான் எதிர்பார்க்கவில்லை, வேறுகாஸ்ட்யூம் போட்டுக் கொண்டு படப்பிடிப்பை தொடரலாம் என இரு பெண்களையும்அழைத்துள்ளார். ஆனால் கண்களில் நீர்மல்க நின்ற இருவரும், எங்களால் மறுபடியும்ஆடவர முடியாது சார், அத்தனை பேருக்கும் முன்னால் எங்கள் மானம் போய்விட்டதே என்று புலம்பியுள்ளனர்.அவர்களை அரும்பாடு பட்டு சமாதானப்படுத்திய பின்னர்அந்தபாடல் காட்சியைதொடர்ந்து எடுத்து முடித்தார்களாம்.வித்தியாசம் என்பதற்காக இப்படியா பெண்களின் மானத்தோடு விளையாடுவது?

    By Staff
    |

    போக்கிரி படப்பிடிப்பின் போது விபரீத நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. பிரபுதேவா இயக்கத்தில், விஜய், அசின் நடிப்பில் வளர்ந்து வருகிறது போக்கிரி.

    சமீபத்தில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர். பிரபுதேவா தான் அந்தக்காட்சிக்கு டான்ஸ் வடிவமைத்திருந்தார். விஜய்யுடன் இரண்டு நடனப் பெண்கள்உடன் ஆடினர். வித்தியாசமாக இருக்கட்டுமே என்று வெறும் துப்பட்டாவை மட்டும்அப்பெண்களின் உடலில் ஆடை போல சுற்றி ஆட விட்டார்கள்.

    வெறும் துப்பட்டாவை மட்டும் ஆடையாக வைத்து ஆடினால், துப்பட்டாநழுவிவிடுமே என்று பிரபுதேவாவிடம் அந்த நடனப் பெண்கள் அச்சம்தெரிவித்துள்ளனர். ஆனால் அப்படியெல்லாம் ஆகாது என்று கூறி அவர்களைதுப்பட்டாவுடன் ஆட விட்டுள்ளார் பிரபுதேவா.

    அந்தப் பெண்கள் நினைத்தபடியே நடந்து விட்டது. சுற்றிலும் ஏராளமான ஆண்கள்குழுமியிருக்க துப்பட்டாவுடன் அப்பெண்கள் சுழன்று சுழன்று ஆடிய போது, திடீரெனஇருவரும் அணிந்திருந்த துப்பட்டா நழுவி விட்டது.இதனால் யூனிட்டே அதிர்ச்சியில் மூழ்கி விட்டது.

    அதை விட அந்த இரு பெண்களும் கூசிப் போய் விட்டனர். விழுந்த துப்பட்டாவைஎடுத்து உடலை மூடியபடி இருவரும் டிரஸ்ஸிங் ரூமுக்கு ஓடினர்.

    பின்னாலேயே ஓடிய பிரபு தேவா, ஸாரிம்மா, இதை நான் எதிர்பார்க்கவில்லை, வேறுகாஸ்ட்யூம் போட்டுக் கொண்டு படப்பிடிப்பை தொடரலாம் என இரு பெண்களையும்அழைத்துள்ளார். ஆனால் கண்களில் நீர்மல்க நின்ற இருவரும், எங்களால் மறுபடியும்ஆடவர முடியாது சார், அத்தனை பேருக்கும் முன்னால் எங்கள் மானம் போய்விட்டதே என்று புலம்பியுள்ளனர்.

    அவர்களை அரும்பாடு பட்டு சமாதானப்படுத்திய பின்னர்அந்தபாடல் காட்சியைதொடர்ந்து எடுத்து முடித்தார்களாம்.

    வித்தியாசம் என்பதற்காக இப்படியா பெண்களின் மானத்தோடு விளையாடுவது?

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X