Don't Miss!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நடிகை பிரியங்காவை கன்னத்தில் அடித்து காயப்படுத்திய களஞ்சியம்... தந்தை புகார்!
சென்னை: நடிகை ப்ரியங்காவை ஓங்கி கன்னத்தில் அடித்து காயம் ஏற்படுத்தியுள்ளார் இயக்குநர் களஞ்சியம். இதனால் நடிகையின் தந்தை ஆவேசப்பட்டு, போலீசில் புகார் தர யோசித்து வருகிறார்.
கங்காரு படத்தில் நடித்துள்ள ப்ரியங்கா, இப்போது கோடை மழை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரியங்காவின் அண்ணன் வேடத்தில் இயக்குநர் களஞ்சியம் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு சங்கரன் கோவில் பகுதியில் நடந்து வருகிறது.
பிரியங்காவுக்கும் களஞ்சியத்துக்கும் வாக்கு வாதம் நடப்பது போலவும், அப்போது கோபமாகி பிரியங்கா கன்னத்தில் களஞ்சியம் அறைவது போலவும் ஒரு காட்சியை எடுத்தனர்.
இதில் களஞ்சியம் நிஜமாகவே கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாராம். இதனால் பிரியங்கா நிலை குலைந்து மயங்கி விழுந்தார். காது கிழிந்து ரத்தம் வழிந்துள்ளது.
உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்தக் காட்சிக்கான ஒத்திகையின்போதும் பலமாக அறைந்துள்ளார் களஞ்சியம்.
களஞ்சியம் மீது இதுவரை புகார் அளிக்கவில்லை பிரியங்காவின் தந்தை. இதுகுறித்து அவர் கூறுகையில், "களஞ்சியம் முதல் முறை அடித்தபோதே என் மகள் பிரியங்காவுக்கு கன்னத்தில் வலி ஏற்பட்டுள்ளது. இதை அவரிடம் குறிப்பிட்டுச் சொன்ன பிறகும், வேண்டும் என்றே ஓங்கி அறைந்துள்ளார். காதில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவ அறிக்கையில் மோசமான காயம் ஏற்பட்டுள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. களஞ்சியத்துக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கும்படி டாக்டர்கள் கூறியுள்ளனர். புகார் அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்," என்றார்.