Don't Miss!
- News தமிழக கலாசாரமாக இருந்தாலும்! ஆரத்திக்கு பணம் கொடுத்ததாக பரவிய வீடியோ.. பாஜக அண்ணாமலை விளக்கம்
- Lifestyle உங்க உடம்பை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு கவசம் வேணுமா? இந்த உணவில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ரஜினி பட ஷூட்டிங்கால் கொலவெறியில் சாலிகிராமம் மக்கள்
சென்னை: ரஜினிகாந்தின் 2.0 படப்பிடிப்பால் சென்னை சாலிகிராமம் மக்கள் கோபத்தில் உள்ளார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 2.0. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் வைத்து ஆக்ஷன் காட்சியை படமாக்கியுள்ளனர்.
குண்டுவெடிப்பு காட்சி
சாலிகிராமத்தில் வைத்து கார் குண்டுவெடிப்பு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. கார் குண்டுவெடிப்பு காட்சியை மிகவும் தத்ரூபமாக படமாக்கியுள்ளனர். அந்த காட்சியில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் பயங்கர சப்தத்துடன் வெடித்துள்ளது.
காது கிழியுது
வெடிபொருட்கள் பயங்கர சப்தத்துடன் வெடித்ததால் ஏற்பட்ட காற்று மற்றும் ஒலி மாசை படக்குழுவாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லையாம். இந்நிலையில் வெடி சப்தம் கேட்டு மக்கள் அச்சமும், கோபமும் அடைந்துள்ளனர். அந்த பகுதியே புகை மண்டலமாக இருந்துள்ளது.
ரஜினி
கார் வெடிக்கும் காட்சியை படமாக்கியபோது அங்கு ரஜினியோ, வில்லன் அக்ஷய் குமாரோ இல்லை. ஷங்கர், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் மட்டும் தான் இருந்துள்ளனர். சாலிகிராமத்தில் ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்துள்ளது.
ஷங்கர் ஹேப்பி
கார் வெடிக்கும் காட்சியால் சாலிகிராமம் மக்கள் கோபத்தில் இருந்தாலும் அது மிகவும் அருமையாக வந்துள்ளதால் ஷங்கர் மகிழ்ச்சியில் உள்ளாராம். அந்த காட்சியை மிகவும் பிரமாண்டமாக படமாக்கியுள்ளார்கள்.