twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தத்துவம் பேசும் ரம்பா இனிமேல் தமிழ்ப் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று வைராக்கியமாக கூறுகிறார் தொடையழகி ரம்பா.அழகிய ரம்பா ஒரு காலத்தில் தனது ஒன்றரைக் கண், கட்டுமஸ்து தொடைகள் என ரசிகர்களை வளைத்துப் போட்டுவைத்திருந்தார். கோவில் கட்டாத குறையாக ரம்பாவுக்கு இருந்தது மவுசு. ஆனால் அதெல்லாம் பழைய கதை.ஷூட்டிங் ஷூட்டிங்காக அலைந்து கொண்டிருந்த ரம்பா இன்று, செக் மோசடி வழக்கு, அவதூறு வழக்கு என கோர்ட் கோர்ட்டாகஅலைந்து கொண்டிருக்கிறார்.எப்படிக் குட்டிக்கரணம் அடித்தும் அவரால் விட்ட இடத்தையும் பிடிக்க முடியவில்லை, ஒண்டிக் கொள்ள கொஞ்சம் கூட இடம்கிடைக்கவில்லை.தமிழில் அவர் இப்போது சுத்தம். ஹீரோயினாக புக் ஆன ஒரே ஒரு படமும் பைனான்ஸ் இல்லாமல் அப்படியே நிற்கிறது.தெலுங்கில் அலெக்ஸ் என்ற ஒரே படத்தில் மட்டும் சமீபத்தில் நடித்துள்ளார். மலையாளம், கன்னடம், இந்தி என இந்திய மொழிப்படங்கள் எதிலுமே அவரைக் காண முடியவில்லை. ஆனால் என்ன ரம்பா எப்படி இருக்கீங்க என்று கேட்டால் மட்டும் படு பிசியாக இருப்பதாக பீலா விடுகிறார். நான் இப்போது கூடபிசியாகத்தான் உள்ளேன். பெங்காலி மொழியில் நடிக்கிறேன், இந்தியில் படம் உள்ளது, தெலுங்கிலும் கூட நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்கிறார்.சரி தமிழ் என்னாச்சு என்றால், தனது கண்களில் கோபம் கொப்பளிக்க பேசுகிறார். அத மட்டும் கேக்காதீங்க. இனிமேல் நான்தமிழ்ப் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்கிறார். அப்படி என்ன ஆயிப் போச்சாம்?எல்லாம் கோர்ட்டு கோர்ட்டாக அலைவதால் வந்த விரக்திதானாம். தமிழ் புரடியூசர்கள் சிலரால் நான் பட்டபாடு போதும்,இனிமேல் தமிழ் சினிமாவே வேண்டாம். சினிமாவில் நடிக்க வாய்ப்பு குறைவது போலத் தெரிந்தால் நான் சமூக சேவையில்இறங்கி விடுவேன்.மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை (கடந்த தேர்தலில் வாஜ்பாயை சந்தித்து பாஜகவில் சேர்ந்தார் ரம்பா என்பதைநினைவில் கொள்க). சமூக சேவை செய்து எனது நாட்களை நிம்மதியாக கழிக்க முடிவு செய்துள்ளேன் என்று தத்துவார்த்தமாகபேசுகிறார் ரம்பா.ரம்பா சினிமாவில் நடிக்காமல் இருந்தாலே அதுவே பெரிய சேவைதான் என்பதை யாராவது ரம்ப்ஸிடம் எடுத்துச்சொல்லலாமே...

    By Staff
    |
    இனிமேல் தமிழ்ப் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று வைராக்கியமாக கூறுகிறார் தொடையழகி ரம்பா.

    அழகிய ரம்பா ஒரு காலத்தில் தனது ஒன்றரைக் கண், கட்டுமஸ்து தொடைகள் என ரசிகர்களை வளைத்துப் போட்டுவைத்திருந்தார். கோவில் கட்டாத குறையாக ரம்பாவுக்கு இருந்தது மவுசு. ஆனால் அதெல்லாம் பழைய கதை.

    ஷூட்டிங் ஷூட்டிங்காக அலைந்து கொண்டிருந்த ரம்பா இன்று, செக் மோசடி வழக்கு, அவதூறு வழக்கு என கோர்ட் கோர்ட்டாகஅலைந்து கொண்டிருக்கிறார்.

    எப்படிக் குட்டிக்கரணம் அடித்தும் அவரால் விட்ட இடத்தையும் பிடிக்க முடியவில்லை, ஒண்டிக் கொள்ள கொஞ்சம் கூட இடம்கிடைக்கவில்லை.

    தமிழில் அவர் இப்போது சுத்தம். ஹீரோயினாக புக் ஆன ஒரே ஒரு படமும் பைனான்ஸ் இல்லாமல் அப்படியே நிற்கிறது.தெலுங்கில் அலெக்ஸ் என்ற ஒரே படத்தில் மட்டும் சமீபத்தில் நடித்துள்ளார். மலையாளம், கன்னடம், இந்தி என இந்திய மொழிப்படங்கள் எதிலுமே அவரைக் காண முடியவில்லை.

    ஆனால் என்ன ரம்பா எப்படி இருக்கீங்க என்று கேட்டால் மட்டும் படு பிசியாக இருப்பதாக பீலா விடுகிறார். நான் இப்போது கூடபிசியாகத்தான் உள்ளேன். பெங்காலி மொழியில் நடிக்கிறேன், இந்தியில் படம் உள்ளது, தெலுங்கிலும் கூட நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்கிறார்.

    சரி தமிழ் என்னாச்சு என்றால், தனது கண்களில் கோபம் கொப்பளிக்க பேசுகிறார். அத மட்டும் கேக்காதீங்க. இனிமேல் நான்தமிழ்ப் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்கிறார். அப்படி என்ன ஆயிப் போச்சாம்?

    எல்லாம் கோர்ட்டு கோர்ட்டாக அலைவதால் வந்த விரக்திதானாம். தமிழ் புரடியூசர்கள் சிலரால் நான் பட்டபாடு போதும்,இனிமேல் தமிழ் சினிமாவே வேண்டாம். சினிமாவில் நடிக்க வாய்ப்பு குறைவது போலத் தெரிந்தால் நான் சமூக சேவையில்இறங்கி விடுவேன்.

    மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை (கடந்த தேர்தலில் வாஜ்பாயை சந்தித்து பாஜகவில் சேர்ந்தார் ரம்பா என்பதைநினைவில் கொள்க). சமூக சேவை செய்து எனது நாட்களை நிம்மதியாக கழிக்க முடிவு செய்துள்ளேன் என்று தத்துவார்த்தமாகபேசுகிறார் ரம்பா.

    ரம்பா சினிமாவில் நடிக்காமல் இருந்தாலே அதுவே பெரிய சேவைதான் என்பதை யாராவது ரம்ப்ஸிடம் எடுத்துச்சொல்லலாமே...

      Read more about: ramba is philosophical
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X