Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சேத்னா..ஆ ஆ.. அவளோட ராவுகள் என்ற பெயரில் அந்தக் காலத்தில் மலையாளத்தில் ஒரு பப்பளக்கா பள பளா படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. மலையாளத்திலிருந்து அப்படியே தமிழுக்கும் ஓடோடி வந்து தமிழ் ரசிகர்களையும் குளிப்பாட்டி விட்டுப் போனது. இப்போது அதே கணக்கில் சேத்னாவின் இரவுகள் என்ற பெயரில் ஒரு கும்தலக்கா கும் கும்மா படம் தயாராகி வருகிறது. வில்லி மூவிஸ் என்ற நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தை மதுபாலா இயக்கியுள்ளார். சித்திக் படத்தின் கதை, வசனத்தை (ரொம்பத் தேவைதான்!) எழுதியுள்ளார். தோ, கதை: மும்பையைச் சேர்ந்தவள் அஞ்சலி. குடும்பத்தில் கஷ்டமான நிலை. வீட்டை விட்டு வெளியேறுகிறாள் அஞ்சலி. தனது தோழி கவிதாவின் வீட்டில் தஞ்சமடையும் அவள், அங்குதங்கியிருந்து வேலை பார்த்து அம்மா, சகோதர, சகோதரிகளைக் காப்பாற்றுகிறாள். மகள் நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், அஞ்சலியின் அம்மாவுக்கு புத்தி மாறுகிறது. உனக்கு இளமை இருக்கிறது, வயது இருக்கிறது. இன்னும் சம்பாதித்து, நல்ல வசதியுடன் வாழ விபச்சாரமே பெஸ்ட் என்று மகளுக்கு அறிவுரை கூறும் அம்மா, கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் இறக்குகிறாள். பகலில் அஞ்சலியாகவும், இரவில் சேத்னா என்ற பெயரிலும் இரட்டை வாழ்க்கையைத் தொடங்குகிறாள் அஞ்சலி. சேத்னாவின் பிரச்சினைகளை அலசுவதே படத்தின் கதையாம் (இப்படில்லாம் எழுத நம்மாளுங்களுக்கு மட்டுமே முடியும்!
அவளோட ராவுகள் என்ற பெயரில் அந்தக் காலத்தில் மலையாளத்தில் ஒரு பப்பளக்கா பள பளா படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. மலையாளத்திலிருந்து அப்படியே தமிழுக்கும் ஓடோடி வந்து தமிழ் ரசிகர்களையும் குளிப்பாட்டி விட்டுப் போனது.
இப்போது அதே கணக்கில் சேத்னாவின் இரவுகள் என்ற பெயரில் ஒரு கும்தலக்கா கும் கும்மா படம் தயாராகி வருகிறது.
வில்லி மூவிஸ் என்ற நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தை மதுபாலா இயக்கியுள்ளார். சித்திக் படத்தின் கதை, வசனத்தை (ரொம்பத் தேவைதான்!) எழுதியுள்ளார்.
தோ, கதை: மும்பையைச் சேர்ந்தவள் அஞ்சலி. குடும்பத்தில் கஷ்டமான நிலை. வீட்டை விட்டு வெளியேறுகிறாள் அஞ்சலி. தனது தோழி கவிதாவின் வீட்டில் தஞ்சமடையும் அவள், அங்குதங்கியிருந்து வேலை பார்த்து அம்மா, சகோதர, சகோதரிகளைக் காப்பாற்றுகிறாள்.
மகள் நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், அஞ்சலியின் அம்மாவுக்கு புத்தி மாறுகிறது. உனக்கு இளமை இருக்கிறது, வயது இருக்கிறது. இன்னும் சம்பாதித்து, நல்ல வசதியுடன் வாழ விபச்சாரமே பெஸ்ட் என்று மகளுக்கு அறிவுரை கூறும் அம்மா, கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் இறக்குகிறாள்.
பகலில் அஞ்சலியாகவும், இரவில் சேத்னா என்ற பெயரிலும் இரட்டை வாழ்க்கையைத் தொடங்குகிறாள் அஞ்சலி. சேத்னாவின் பிரச்சினைகளை அலசுவதே படத்தின் கதையாம் (இப்படில்லாம் எழுத நம்மாளுங்களுக்கு மட்டுமே முடியும்!)
அஞ்சலி பிளஸ் சேத்னாவாக நடித்துள்ளவர் ரீனா கபூர். படு வாளிப்பாக, கிளுகிளு வாலிபத்துடன் இருக்கிறார் ரீனா கபூர். படம் முழுக்க ரீனா, வாளை மீனாட்டம் கிளாமரில் துள்ளிக் குதிக்கிறாராம்.
அஞ்சலியாக வரும்போது அட்டகாசமான நடிப்பையும், சேத்னாவாக மாறிய பின்னர் கிளாமரிலும் கில்லி போல விளையாடியுள்ளாராம் ரீனா.
ரீனாவின் ஸ்டில்களைப் பார்க்கும்போது அவளோட ராவுகளை இந்த சேத்னாவின் இரவுகள் பீட் செய்யும் என்று அடித்துச் சத்தியம் செய்யலாம் போல, அந்த அளவுக்கு கவர்ச்சி ரசம் பொங்கித் ததும்புகிறது.
விபச்சார விபத்திலிருந்து அஞ்சலி எப்படி மீளுகிறாள் என்று கூறி கதையை முடிக்கிறார்களாம்.