Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'மலர் டீச்சர்' நடந்துக்கிறது கொஞ்சம் கூட சரியில்லையாம்... சக நடிகரே குற்றச்சாட்டு!
சென்னை : 'பிரேமம்' படத்தின் மூலம் மலர் டீச்சர் என ரசிகர்கள் கொண்டாடிய சாய் பல்லவி தற்போது 'கரு' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் சாய் பல்லவி அடாவடியாகவும், சீன் போடும் விதமாகவும் நடந்துகொள்வதாக 'கரு' படத்தின் ஹீரோ குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதற்கு முன்பு நானியுடன் சாய் பல்லவி நடித்த போது இதே போல ஒரு குற்றச்சாட்டு எழுந்து, இருவருக்கும் கருத்து வேறுபாடாகி நானி ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு கிளம்பியதாகக் கூறப்பட்டது.
சாய் பல்லவி
அறிமுகமான முதல் படமான 'பிரேமம்' படத்திலேயே அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சாய்பல்லவி. ஆனால் அந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ், மலையாளத்திற்கு முக்கியத்துவம் தராமல் தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழில்
தற்போதுதான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'கரு' என்கிற தமிழ்படத்தில் முதன்முதலாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. ஒரே நேரத்தில் தெலுங்கிலும் தயாராகும் இந்தப்படத்தில் நாயகனாக நாக சவுர்யா என்பவர் நடித்துள்ளார்.
கரு
'கரு' படத்தில் நடித்தபோது சாய் பல்லவி செட்டில் ஓவர் பந்தா காட்டியதாகவும் தேவையில்லாத சின்ன சின்ன விஷயங்களில் கூட அடாவடியாக நடந்து கொண்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நாக சவுர்யா.
கர்வமாக நடந்துகொள்கிறார்
'ஃபிடா' படம் ஹிட்டாகி சாய் பல்லவிக்கு பெயர் வாங்கி தந்தது உண்மை தான். ஆனால், அந்தப்படத்தின் வெற்றிக்கு அவர் மட்டுமே காரணம் என்பதுபோல நடந்துகொள்வதாகவும் குற்றச்சாட்டை அடுக்கியுள்ளார் நாக சவுர்யா.
நானியை கோவமாக்கினார்
இதேபோல 'மிடில் கிளாஸ் அப்பாயி' படத்தின் படப்பிடிப்பிலும் சாய் பல்லவி இப்படி நடந்துகொண்டதால் அதன் ஹீரோ நானி கோபத்தில் செட்டை விட்டே கிளம்பிச் சென்றதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.