சாலக்குடியும் சமிக்ஷாவும் சாலக்குடி அருவியில் சமிக்ஷா விழப் போக அவரைக் காப்பாற்றி மெய்யாலுமே தான் ஒரு ஹீரோ என்பதை நிரூபித்துள்ளார்ஷாம்.அறிந்தும் அறியாமலும் சமிக்ஷா கோலிவுட்டில் வேகமாக முன்னேறி வருகிறார். கிளாமரில் புகுந்து விளையாடத்தொடங்கியிருக்கும் சமிக்ஷா, மெர்க்குரிப் பூக்கள் படத்தில் ஸ்ரீகாந்த்துடன் ஒரு பாட்டில் கெறங்கடித்திருக்கிறார்.மூக்கும்முழியுமாக இருக்கும் சமிக்ஷா, ஷாமுடன் இணைந்து நடித்து வரும் படம் தான் மனதோடு மழைக்காலம். இதில்ஷாமுக்கு இரண்டு ஜோடிகள். சமிக்ஷா தவிர கேரளத்து நித்யா தாஸும் இருக்கிறார்.இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலே படத்துக்கு கிளாமர் பஞ்சம் இருக்காது. அந்த இலக்கணம் இந்தப் படத்திலும்மீறப்படவில்லையாம். சமிக்ஷாவும், நித்யாவும் போட்டி போட்டுக் கொண்டு போர்வையை விலக்கியுள்ளார்களாம். மனதோடு மழைக்காலம் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளத்தின் சாலக்குடி அருவிப் பகுதியில் நடந்தது. (அதானுங்கோ, சரத்குமார்மடி மீதும், தோள் மீதும் நமீதா ஏறி விளையாடி, அர்ஜூனா அர்ஜூனா என்று ஆடிப்பாடிய ஏய் படப் பாடல் படமானதே.. அதேஇடம் தான்)அருவித் தண்ணீர் ஜோவென கொட்டிக் கொண்டிருக்க மலை உச்சியின் மீது ஷாம், சமிக்ஷாவும் பாடுவது போல காட்சி.கண்கள் தேடுதே, கவி பாடுதே அலை பாயுதே மனதே என்று ஆரம்பிக்கும் பாடல் வரிகளை உச்சரித்துக் கொண்டே இருவரும் ஆடுவது போல டான்ஸ் காட்சியைவைத்துள்ளனர்.டான்ஸ் மாஸ்டர் நோபுள் மூவ்மென்ட்களை சொல்லிக் கொடுக்க, ஷூட் செய்ய ரெடியானார்கள். ஆக்ஷன் என்றதும் ஆடத் தொடங்கினர் ஷாமும், சமிக்ஷாவும். அப்போது எதிர்பாராதவிதமாக அருவியில் நீரோட்டம் வேகம்பிடிக்க தடுமாறிப் போன சமிக்ஷா அருவியில் தவறி விழப் போனார்.சடாரென சுதாரித்த ஷாம், அப்படியே சமிக்ஷாவின் கையைப் பிடித்து வேகமாக தூக்கிப் போட்டுள்ளார். ஒரு வினாடி தாமதித்திருந்தாலும் கூட சமிக்ஷாவை அருவி அள்ளிப் போயிருக்கும். இந்த சம்பவத்தால் யூனிட்டே ஸ்தம்பித்துப்போய் விட்டதாம். அதிர்ச்சியிலிருந்து ரொம்ப நேரமாக விலக முடியாமல் பிரமை பிடித்தவர் போலாகி விட்டாராம் சமிக்ஷா.ஷாம், மற்றவர்களும் சேர்ந்து அவரை தேற்றி இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தனராம். ஷாமின் கையைப் பிடித்து மாறி மாறிதேங்க்ஸ் சொல்லிக் கொண்டே இருந்தாராம் சமிக்ஷா. ஷாம் சற்று சுதாரித்திருக்காவிட்டாலும் இன்று சமிக்ஷா இல்லை சார் என்று இயக்குநிர் பீதி குறையாமல் கூறினார்.கொசுறு: மாதவன்-பாவனா நடிக்கும் ஆர்யா என்ற படத்திலும் செகண்ட் ஹீரோயினாக செலக்ட் ஆகியிருந்தார் சமிக்ஷா.ஆனால், என்ன நடந்ததோ அவரைத் தூக்கிவிட்டு மம்தா என்பவரைப் போட்டார்கள்.அவருக்கு என்ன ஆச்சோ.. மும்பைக்குப் போனவர் திரும்பி வரவே இல்லை.இப்போது அந்த ரோலில் தேஜாஸ்ரீ நடித்துக் கொண்டிருக்கிறார்.

By Staff
சாலக்குடி அருவியில் சமிக்ஷா விழப் போக அவரைக் காப்பாற்றி மெய்யாலுமே தான் ஒரு ஹீரோ என்பதை நிரூபித்துள்ளார்ஷாம்.

அறிந்தும் அறியாமலும் சமிக்ஷா கோலிவுட்டில் வேகமாக முன்னேறி வருகிறார். கிளாமரில் புகுந்து விளையாடத்தொடங்கியிருக்கும் சமிக்ஷா, மெர்க்குரிப் பூக்கள் படத்தில் ஸ்ரீகாந்த்துடன் ஒரு பாட்டில் கெறங்கடித்திருக்கிறார்.

மூக்கும்முழியுமாக இருக்கும் சமிக்ஷா, ஷாமுடன் இணைந்து நடித்து வரும் படம் தான் மனதோடு மழைக்காலம். இதில்ஷாமுக்கு இரண்டு ஜோடிகள். சமிக்ஷா தவிர கேரளத்து நித்யா தாஸும் இருக்கிறார்.

இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலே படத்துக்கு கிளாமர் பஞ்சம் இருக்காது. அந்த இலக்கணம் இந்தப் படத்திலும்மீறப்படவில்லையாம். சமிக்ஷாவும், நித்யாவும் போட்டி போட்டுக் கொண்டு போர்வையை விலக்கியுள்ளார்களாம்.

மனதோடு மழைக்காலம் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளத்தின் சாலக்குடி அருவிப் பகுதியில் நடந்தது. (அதானுங்கோ, சரத்குமார்மடி மீதும், தோள் மீதும் நமீதா ஏறி விளையாடி, அர்ஜூனா அர்ஜூனா என்று ஆடிப்பாடிய ஏய் படப் பாடல் படமானதே.. அதேஇடம் தான்)

அருவித் தண்ணீர் ஜோவென கொட்டிக் கொண்டிருக்க மலை உச்சியின் மீது ஷாம், சமிக்ஷாவும் பாடுவது போல காட்சி.

கண்கள் தேடுதே,

கவி பாடுதே

அலை பாயுதே

மனதே என்று ஆரம்பிக்கும் பாடல் வரிகளை உச்சரித்துக் கொண்டே இருவரும் ஆடுவது போல டான்ஸ் காட்சியைவைத்துள்ளனர்.

டான்ஸ் மாஸ்டர் நோபுள் மூவ்மென்ட்களை சொல்லிக் கொடுக்க, ஷூட் செய்ய ரெடியானார்கள்.

ஆக்ஷன் என்றதும் ஆடத் தொடங்கினர் ஷாமும், சமிக்ஷாவும். அப்போது எதிர்பாராதவிதமாக அருவியில் நீரோட்டம் வேகம்பிடிக்க தடுமாறிப் போன சமிக்ஷா அருவியில் தவறி விழப் போனார்.

சடாரென சுதாரித்த ஷாம், அப்படியே சமிக்ஷாவின் கையைப் பிடித்து வேகமாக தூக்கிப் போட்டுள்ளார்.

ஒரு வினாடி தாமதித்திருந்தாலும் கூட சமிக்ஷாவை அருவி அள்ளிப் போயிருக்கும். இந்த சம்பவத்தால் யூனிட்டே ஸ்தம்பித்துப்போய் விட்டதாம். அதிர்ச்சியிலிருந்து ரொம்ப நேரமாக விலக முடியாமல் பிரமை பிடித்தவர் போலாகி விட்டாராம் சமிக்ஷா.

ஷாம், மற்றவர்களும் சேர்ந்து அவரை தேற்றி இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தனராம். ஷாமின் கையைப் பிடித்து மாறி மாறிதேங்க்ஸ் சொல்லிக் கொண்டே இருந்தாராம் சமிக்ஷா.

ஷாம் சற்று சுதாரித்திருக்காவிட்டாலும் இன்று சமிக்ஷா இல்லை சார் என்று இயக்குநிர் பீதி குறையாமல் கூறினார்.

கொசுறு: மாதவன்-பாவனா நடிக்கும் ஆர்யா என்ற படத்திலும் செகண்ட் ஹீரோயினாக செலக்ட் ஆகியிருந்தார் சமிக்ஷா.ஆனால், என்ன நடந்ததோ அவரைத் தூக்கிவிட்டு மம்தா என்பவரைப் போட்டார்கள்.

அவருக்கு என்ன ஆச்சோ.. மும்பைக்குப் போனவர் திரும்பி வரவே இல்லை.

இப்போது அந்த ரோலில் தேஜாஸ்ரீ நடித்துக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X