சந்தியா-பரத்-பாவனா வெள்ளந்தியான ஆளுக என்று மதுரைக்காரவுகளை கூறுவார்கள். அதுக்காகஅவுகளை அப்பிராணி என்று நினைத்து விடக் கூடாது. பொங்க வேண்டிய நேரத்தில்சரியாக பொங்கி விடுவார்கள். இதையே களமாக வைத்து கூடல்நகர் என்ற படம் உருவாகி வருகிறது. காதல் படம்ஹிட் ஆனவுடன் பரத் நடிக்க ஒப்புக் கொண்ட படம்தான் கூடல்நகர்.காதலில் ஜோடி சேர்ந்த சந்தியாதான் இதிலும் நாயகி. ஆனால் படம் ரொம்ப நாளாககிடப்பில் போடப்பட்டிருந்தது. இப்போது தூசு தட்டி தூள் கிளப்ப தயாராகிவருகின்றனர்.சந்தியாவுடன், லேட்டஸ்ட் லகலகா பாவனாவும் இப் படத்தில் இருக்கிறார்.இதில் வெள்ளிந்தியான காரெக்டராம் பரத். பாவனாவும், சந்தியாவும் போட்டி போட்டுநடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தவிர படத்தில் ரோகிணியும் இருக்கிறார்.அவருக்கு மிக முக்கியமான கேரக்டராம்.பரத்தின் அம்மாவாக இந்து நடிக்கிறார். ஹீரோயின் கனவுடன் சினிமாவுக்கு வந்து அக்கா,தங்கச்சி, நாத்தனார், கொழுந்தியா வேடங்களில் நடித்து க் கொண்டிருந்தவர்தான்இந்து. இடையில் டிவிப் பக்கமாய் போய்விட்டார். இப்போது மீண்டும் தலைகாட்டுகிறார்.பிதாமகன் வில்லன் மகாதேவனும் படத்தில் இருக்கிறார். சபேஷ்-முரளியின் கொத்துப்புரோட்டா இசைக்கு பழனிபாரதியும், நா.முத்துக்குமாரும் பாட்டுக்களைபோட்டுள்ளனர்.பாரதிராஜவின் அசோசியேட் தேன்மொழியும் பாட்டு எழுதியுள்ளார்.சீனு ராமசாமிதான் கதை, திரைக்கதை அமைத்து இயக்கவும் செய்கிறார். இவர் சிங்கத்தமிழன் சீமானிடம் உதவியாளராக இருந்தவர். படத்தை மதுரையைச் சுற்றிலும் சுட்டுவருகிறார்கள். திண்டுக்கல், திருப்பரங்குன்றம் என மதுரை மண்ணில் கேமரா சுற்றிச்சுழன்று கொண்டிருக்கிறதாம்.அண்ணே, படத்தை வெரசா முடிங்கண்ணே..
வெள்ளந்தியான ஆளுக என்று மதுரைக்காரவுகளை கூறுவார்கள். அதுக்காகஅவுகளை அப்பிராணி என்று நினைத்து விடக் கூடாது. பொங்க வேண்டிய நேரத்தில்சரியாக பொங்கி விடுவார்கள்.
இதையே களமாக வைத்து கூடல்நகர் என்ற படம் உருவாகி வருகிறது. காதல் படம்ஹிட் ஆனவுடன் பரத் நடிக்க ஒப்புக் கொண்ட படம்தான் கூடல்நகர்.காதலில் ஜோடி சேர்ந்த சந்தியாதான் இதிலும் நாயகி. ஆனால் படம் ரொம்ப நாளாககிடப்பில் போடப்பட்டிருந்தது. இப்போது தூசு தட்டி தூள் கிளப்ப தயாராகிவருகின்றனர்.
சந்தியாவுடன், லேட்டஸ்ட் லகலகா பாவனாவும் இப் படத்தில் இருக்கிறார்.
இதில் வெள்ளிந்தியான காரெக்டராம் பரத். பாவனாவும், சந்தியாவும் போட்டி போட்டுநடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தவிர படத்தில் ரோகிணியும் இருக்கிறார்.அவருக்கு மிக முக்கியமான கேரக்டராம்.
பரத்தின் அம்மாவாக இந்து நடிக்கிறார். ஹீரோயின் கனவுடன் சினிமாவுக்கு வந்து அக்கா,தங்கச்சி, நாத்தனார், கொழுந்தியா வேடங்களில் நடித்து க் கொண்டிருந்தவர்தான்இந்து. இடையில் டிவிப் பக்கமாய் போய்விட்டார். இப்போது மீண்டும் தலைகாட்டுகிறார்.
பிதாமகன் வில்லன் மகாதேவனும் படத்தில் இருக்கிறார். சபேஷ்-முரளியின் கொத்துப்புரோட்டா இசைக்கு பழனிபாரதியும், நா.முத்துக்குமாரும் பாட்டுக்களைபோட்டுள்ளனர்.பாரதிராஜவின் அசோசியேட் தேன்மொழியும் பாட்டு எழுதியுள்ளார்.
சீனு ராமசாமிதான் கதை, திரைக்கதை அமைத்து இயக்கவும் செய்கிறார். இவர் சிங்கத்தமிழன் சீமானிடம் உதவியாளராக இருந்தவர். படத்தை மதுரையைச் சுற்றிலும் சுட்டுவருகிறார்கள். திண்டுக்கல், திருப்பரங்குன்றம் என மதுரை மண்ணில் கேமரா சுற்றிச்சுழன்று கொண்டிருக்கிறதாம்.
அண்ணே, படத்தை வெரசா முடிங்கண்ணே..


Click it and Unblock the Notifications











