Don't Miss!
- News நிர்மலா கிட்ட காசு இல்லை.. அப்ப தமிழிசையிடம் பணமிருக்கா? நிதியமைச்சர் மீது பாய்ச்சல்? யார்னு பாருங்க
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நடிகைக்கு பளார்! அழுவது போன்ற காட்சியில் சரியாக நடிக்காததால், மலையாள நடிகை சரிதாதாஸுக்கு இயக்குநர் பளார் என அறை கொடுத்து நடிக்க வைத்ததால் ஷூட்டிங்ஸ்பாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.ஆட்டம் என்ற படத்தில் மலையாள நடிகை சரிதா தாஸ் நடித்து வருகிறார்.இப்படத்தை அய்யனார் என்ற இயக்குநர் இயக்கி வருகிறார். ஆட்டம் படத்தின்ஷூட்டிங் நாகர்கோவிலில் சில நாட்களாக நடந்து வந்தது.இதில் சரிதா தாஸ் அழுவது போன்ற ஒருகாட்சியை படமாக்கினார் அய்யனார்.ஆனால் பல டேக்குகள் வாங்கியும் சரிதா தாஸ் சரியாக அழவில்லை. இதனால்எரிச்சலடைந்த அய்யனார் திடீரென யாரும் எதிர்பாராத வகையில், சரிதா தாஸ்கன்னத்தில் விட்டார் ஒரு அறை.அதிர்ச்சி அடைந்த சரிதா தாஸ் கண்களில் கண்ணீர் கொப்புளிக்க, எதற்காகஅடித்தீர்கள் என்று கோபத்துடன் அய்யனாரை கேட்டார். காரணத்தை சொன்னஅய்யனார், சரிதாவை சமாதானப்படுத்தி அவரை நடிக்க வைத்தார். அப்புறம் காட்சிஓ.கே. ஆனதாம்.ஹீரோயினை இயக்குநர் அய்யனார் பளார் என அறைந்ததால் ஷூட்டிங் ஸ்பாட்டில்பரபரப்பு ஏற்பட்டது. அய்யனார் தன்னை அடித்தது குறித்து சரிதா தாஸ் கூறுகையில்,எனக்கு சரியாக அழ வரவில்லை. பல டேக்குகள் வாங்கினேன். அப்போதுதான்திடீரென இயக்குநர் என்னை அறைந்தார்.அவர் அடித்ததில், எனக்கு வலி ஏற்பட்டு நிஜமாகவே அழுது விட்டேன். அப்புறம்காட்சி ஓ.கே. ஆனது. நான் நடிக்கவே வர மாட்டேன் என்றுதான் முதலில்இயக்குநரிடம் கூறினேன். நான் இப்போது படித்து வருகிறேன். படிப்பைத் தொடரவேண்டும்.எனவே இந்தப் படத்துடன் சரி, இனிமேல் நடிக்க மாட்டேன் என்றார் சரிதா, அடிவாங்கிய கன்னத்தைத் தடவியபடி. இப்படி அடிச்சுட்டீங்களே என்று அய்யனாரிடம்கேட்டால், எத்தனை தடவை சொல்லியும் சரியாக அழாமல் நடித்தார் சரிதா.இதனால்தான் விட்டேன் ஒரு அறை. அப்புறம் சரியாக நடித்தார். காட்சியைபடமாக்கிய பிறகு ரஷ் போட்டுப் பார்த்தபோது, இன்னும் இரண்டு அறை கூடவிட்டிருக்கலாமோ என்று தோன்றியது என்றார் படு கூலாக.பாரதிராஜா ஸ்டைலும் இதுதான். சரியாக நடிக்காவிட்டால் அடித்து நடிக்க வைப்பார்.பாலச்சந்தரும் கூட சில நேரங்களில் இப்படிச் செய்வாராம். இப்போது அந்த இடத்தைநிரப்ப வந்துள்ளார் அய்யனார்.
ஆட்டம் என்ற படத்தில் மலையாள நடிகை சரிதா தாஸ் நடித்து வருகிறார்.இப்படத்தை அய்யனார் என்ற இயக்குநர் இயக்கி வருகிறார். ஆட்டம் படத்தின்ஷூட்டிங் நாகர்கோவிலில் சில நாட்களாக நடந்து வந்தது.
இதில் சரிதா தாஸ் அழுவது போன்ற ஒருகாட்சியை படமாக்கினார் அய்யனார்.ஆனால் பல டேக்குகள் வாங்கியும் சரிதா தாஸ் சரியாக அழவில்லை. இதனால்எரிச்சலடைந்த அய்யனார் திடீரென யாரும் எதிர்பாராத வகையில், சரிதா தாஸ்கன்னத்தில் விட்டார் ஒரு அறை.
ஹீரோயினை இயக்குநர் அய்யனார் பளார் என அறைந்ததால் ஷூட்டிங் ஸ்பாட்டில்பரபரப்பு ஏற்பட்டது. அய்யனார் தன்னை அடித்தது குறித்து சரிதா தாஸ் கூறுகையில்,எனக்கு சரியாக அழ வரவில்லை. பல டேக்குகள் வாங்கினேன். அப்போதுதான்திடீரென இயக்குநர் என்னை அறைந்தார்.
அவர் அடித்ததில், எனக்கு வலி ஏற்பட்டு நிஜமாகவே அழுது விட்டேன். அப்புறம்காட்சி ஓ.கே. ஆனது. நான் நடிக்கவே வர மாட்டேன் என்றுதான் முதலில்இயக்குநரிடம் கூறினேன். நான் இப்போது படித்து வருகிறேன். படிப்பைத் தொடரவேண்டும்.
இதனால்தான் விட்டேன் ஒரு அறை. அப்புறம் சரியாக நடித்தார். காட்சியைபடமாக்கிய பிறகு ரஷ் போட்டுப் பார்த்தபோது, இன்னும் இரண்டு அறை கூடவிட்டிருக்கலாமோ என்று தோன்றியது என்றார் படு கூலாக.
பாரதிராஜா ஸ்டைலும் இதுதான். சரியாக நடிக்காவிட்டால் அடித்து நடிக்க வைப்பார்.பாலச்சந்தரும் கூட சில நேரங்களில் இப்படிச் செய்வாராம். இப்போது அந்த இடத்தைநிரப்ப வந்துள்ளார் அய்யனார்.