Don't Miss!
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஒருவனின் செயல் தான் அவனை உயரவைக்கும்… ஆர்யா பற்றி சாயிஷா ட்வீட்
சென்னை: நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்து வரும் டெடி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்படத்தில் நடித்தது பற்றி குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்ட சாயிஷா, உயரம் ஒரு மனிதனை உயர வைக்காது, அவனுடைய செயல்கள் தான் அதை உறுதிசெய்யும், என்று தனது கணவர் ஆர்யாவை பற்றி ஒரு ட்வீட் செய்துள்ளார்.
கஜினிகாந்த் திரைப்படத்திற்கு பிறகு ரியல் ஜோடியான ஆர்யாவும், சாயிஷாவும் மறுபடியும் திரையில் ஜோடியாக நம் மனங்களை கவரப் போகும் திரைப்படம் டெடி.
மிருதன், டிக் டிக் டிக் ஆகிய திரைப்படங்கள் மூலம் ஜெயம் ரவியை இயக்கிய சக்தி சௌந்தராஜன் தற்பொழுது ஆர்யா, சாயிஷா ஜோடியை டெடி திரைப்படம் மூலம் இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் டி.இமான்.
படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு மிக விரைவாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படத்தின் கதாநாயகி சாயிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் உயரம் ஒரு மனிதனை உயர வைக்காது, அவனுடைய செயல்கள் தான் அதை உறுதிசெய்யும், என்று தனது கணவர் ஆர்யாவை பற்றி ஒரு ட்வீட் செய்துள்ளார்.
Height doesn’t make a man tall...his actions do! He’s my strength @arya_offl 😘😘😘
— Sayyeshaa (@sayyeshaa) October 12, 2019
Shooting the last schedule of #Teddy with an amazing human being and a fabulous director @ShaktiRajan can’t wait for you all to see our film on screen! @actorsathish @immancomposer @StudioGreen2 pic.twitter.com/cOtFUcMfCb
ஒரு அற்புதமான நடிகருடனும் அற்புதமான இயக்குநருடனும் படப்பிடிப்பில் கலந்து கொண்டது எனக்கு மிக சுவாரசியமாய் இருந்தது. மிக விரைவில் நீங்கள் அனைவரும் இந்த படத்தை திரையில் காணலாம் என்றும் தெரிவித்திருந்தார் நடிகை சாயிஷா.
மேலும் இப்படத்தை பற்றி இயக்குநர் சக்தி சௌந்தராஜன் கூறுகையில், இது குழந்தைகளையும், குடும்பங்களையும் பெரிதும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐரோப்பாவில் படமாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
யாஷிகாவுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்.. அடம்பிடிக்கும் நடிகை.. ஏன் தெரியுமா?
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திற்க வந்துவிட்டதாகவும், இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவுக்கு வந்துவிடும் என்று ஆர்யாவும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து, ஆர்யா மற்றும் சாயிஷா இருவருக்கும் இடையில் இருந்த நடிகர் நடிகை என்ற உறவானது முடிவுக்கு வரவிருக்கிறது. இதற்கு பின்பு இருவரும் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றே கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.