ரஜினியின் முதலிரவு! ஷங்கரின் இரும்புக் கோட்டைக்குள் படமாக்கப்பட்டு வரும் சிவாஜி குறித்ததகவல்கள் அவ்வப்போது கசிந்து ஷங்கருக்கு டென்ஷனைக் கொடுத்து வருகின்றன.மேலும் மேலும் அவர் பாதுகாப்பு வளையத்தை மாற்றினாலும் கூட சிவாஜி குறித்தசெய்திகள் கசிந்து கொண்டேதான் இருக்கின்றன. இப்போது கசிந்திருப்பது இரு கரும்பான செய்தி.சமீபத்தில் ரஜினிக்கும், ஷ்ரேயாவுக்கும் கல்யாணம் நடந்ததில்லையா? (சிவாஜிபடத்துக்காகத்தான்!) அதற்குப் பிறகு நடந்த முதலிரவுக் காட்சியை படு ஷோக்காகபடமாக்கியுள்ளாராம் ஷங்கர்.ரஜினி, ஷ்ரேயாவின் முதலிரவை நாம் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமா? முதலிரவுஅறை. ரஜினி படு ஜாலியாக உட்கார்ந்திருக்க உள்ளே நுழைகிறார் ஷ்ரேயா.அவர் உள்ளே வந்தவுடன் குஷியாகிப் போகும் ரஜினி பாட்டை எடுத்து விடுகிறார்.எந்தப் பாட்டை? எம்.ஜி.ஆரும், மஞ்சுளாவும் ரிக்ஷாக்காரனில் பாடிய, அழகிய தமிழ்மகள் இவள், இரு விழிகளில் எழுதிய மடல் என்ற பாடல்தான் அது.ரிக்ஷாக்காரன் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாட்டுக்கான அதே செட்டில் ரஜினி,ஷ்ரேயா பாடும் பாடலையும் சுட்டுள்ளார்கள். எம்.ஜி.ஆர். கெட்டப்பில் ரஜினியும்,மஞ்சுளாவாக மாறிய ஷ்ரேயாவும் கலக்கலாக ஆடிப் பாடுகிறார்கள்.காட்சி அப்படியே மாறுகிறது. வசந்த மாளிகை சிவாஜி கெட்டப்பில் ரஜினி, வாணிஸ்ரீபோல ஒய்யாரக் கொண்டையுடன் ஷ்ரேயா. மயக்கமென்ன இந்த மவுனம் என்னஎன்ற பாடலை இருவரும் பாடி அசத்துகிறார்கள்.அப்படியே சீன் மாறுகிறது. நேத்து ராத்திரி அம்மா ஒலிக்க, கமலாக மாறிய ரஜினியும்,சிலுக்காக மாறிய ஷ்ரேயாவும் சிலிர்க்க வைக்கும் வகையில் ஆடிப் பாடுகிறார்கள்.இப்படி ஒவ்வொரு பாட்டாக பாடிக் கொண்டு வரும் ரஜினி, இதெல்லாம் நமக்குசரிப்படாது, நம்ம ஸ்டைலுக்கு போக வேண்டியதுதான் என்று கூறி ரஜினி ஸ்டைலில்அசத்தல் கெட்டப்பில் ஆட்டம் போடுகிறார்.இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது ரஜினி போட்டு வந்த ஒவ்வொருகெட்டப்பையும் பார்த்து செட்டில் இருந்ததவர்கள் அசந்து போனார்களாம். இந்தக்காட்சி, ரசிகர்களையும் அசத்தும் என்று அடித்துச் சொல்கிறார்கள்.ரொம்பவே நல்லாருக்கு!

By Staff
ஷங்கரின் இரும்புக் கோட்டைக்குள் படமாக்கப்பட்டு வரும் சிவாஜி குறித்ததகவல்கள் அவ்வப்போது கசிந்து ஷங்கருக்கு டென்ஷனைக் கொடுத்து வருகின்றன.

மேலும் மேலும் அவர் பாதுகாப்பு வளையத்தை மாற்றினாலும் கூட சிவாஜி குறித்தசெய்திகள் கசிந்து கொண்டேதான் இருக்கின்றன.

இப்போது கசிந்திருப்பது இரு கரும்பான செய்தி.

சமீபத்தில் ரஜினிக்கும், ஷ்ரேயாவுக்கும் கல்யாணம் நடந்ததில்லையா? (சிவாஜிபடத்துக்காகத்தான்!) அதற்குப் பிறகு நடந்த முதலிரவுக் காட்சியை படு ஷோக்காகபடமாக்கியுள்ளாராம் ஷங்கர்.

ரஜினி, ஷ்ரேயாவின் முதலிரவை நாம் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமா? முதலிரவுஅறை. ரஜினி படு ஜாலியாக உட்கார்ந்திருக்க உள்ளே நுழைகிறார் ஷ்ரேயா.

அவர் உள்ளே வந்தவுடன் குஷியாகிப் போகும் ரஜினி பாட்டை எடுத்து விடுகிறார்.எந்தப் பாட்டை? எம்.ஜி.ஆரும், மஞ்சுளாவும் ரிக்ஷாக்காரனில் பாடிய, அழகிய தமிழ்மகள் இவள், இரு விழிகளில் எழுதிய மடல் என்ற பாடல்தான் அது.

ரிக்ஷாக்காரன் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாட்டுக்கான அதே செட்டில் ரஜினி,ஷ்ரேயா பாடும் பாடலையும் சுட்டுள்ளார்கள். எம்.ஜி.ஆர். கெட்டப்பில் ரஜினியும்,மஞ்சுளாவாக மாறிய ஷ்ரேயாவும் கலக்கலாக ஆடிப் பாடுகிறார்கள்.

காட்சி அப்படியே மாறுகிறது. வசந்த மாளிகை சிவாஜி கெட்டப்பில் ரஜினி, வாணிஸ்ரீபோல ஒய்யாரக் கொண்டையுடன் ஷ்ரேயா. மயக்கமென்ன இந்த மவுனம் என்னஎன்ற பாடலை இருவரும் பாடி அசத்துகிறார்கள்.

அப்படியே சீன் மாறுகிறது. நேத்து ராத்திரி அம்மா ஒலிக்க, கமலாக மாறிய ரஜினியும்,சிலுக்காக மாறிய ஷ்ரேயாவும் சிலிர்க்க வைக்கும் வகையில் ஆடிப் பாடுகிறார்கள்.

இப்படி ஒவ்வொரு பாட்டாக பாடிக் கொண்டு வரும் ரஜினி, இதெல்லாம் நமக்குசரிப்படாது, நம்ம ஸ்டைலுக்கு போக வேண்டியதுதான் என்று கூறி ரஜினி ஸ்டைலில்அசத்தல் கெட்டப்பில் ஆட்டம் போடுகிறார்.

இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது ரஜினி போட்டு வந்த ஒவ்வொருகெட்டப்பையும் பார்த்து செட்டில் இருந்ததவர்கள் அசந்து போனார்களாம். இந்தக்காட்சி, ரசிகர்களையும் அசத்தும் என்று அடித்துச் சொல்கிறார்கள்.

ரொம்பவே நல்லாருக்கு!

More from Filmibeat

Read more about: sizzling scene in shivaji
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X