சம்பளப் பிரச்சினை: சினிமா படப்பிடிப்பு ரத்து; சென்னை திரும்பிய நடிகர் நடிகைகள்

சூரி, கிருஷ்ணலீலை ஆகிய படங்களை இயக்கிய ஸெல்வன், இப்போது நடிகராகவும் மாறிவிட்டார். இவர் ஏற்கனவே 'மாக்கான்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்போது, 'மாயவரம்' என்ற புதிய படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இன்பநிலா நடிக்கிறார்.
ராம்தேவ் இயக்கும் இப்படத்தை வயலார் ராஜேந்திரன் தயாரிக்கிறார். சீர்காழி அருகில் உள்ள திருமுல்லை வாசல் என்ற கிராமத்தில் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது படத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் திடீர் 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டனர்.
'எங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சம்பளத்தை கொடுத்தால்தான் படத்தில் வேலை செய்வோம்,' என்று கூறிவிட்ட அவர்கள் யாருடைய சமாதானத்தையும் ஏற்கவில்லை.
அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் உள்பட படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினர்.
இதே நிலை மற்ற படப்பிடிப்புகளிலும் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்று கருதப்படுவதால், தயாரிப்பாளர்கள் அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











