twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டென்ஷனில் ஷ்ராவ்யா முழுக் கவர்ச்சியில் முக்காட்டம் போட்டு நடித்துள்ள தீண்டத் தீண்ட படம் வெளியாவது, தாமதம் ஆவதால் டென்ஷனாக இருக்கிறார் ஷ்ராவ்யா. பெயரலேயே காந்தத்தைப் போட்டு கவர்ந்திழுக்கும் ஷ்ராவ்யா, தமிழுக்கு வந்தபோது புதுசாக இருந்தார். தீண்டத் தீண்ட என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் ஷ்ராவ்யா இதில் கவர்ச்சியில் குச்சிப்புடி ஆடியுள்ளார். ஆனால், இந்தப் படத்தின் தயாரிப்புப் பணி ஒரு வருடத்துக்கும் மேலாக அப்படியே நின்று போனதால் பிலிம்ரோலைப் போலவே ஷ்ராவ்யாவும் பழசாகி வருகிறார். இது தான் ஷ்ராவ்யாவுக்கும் கவலையாம். சட்டு புட்டு என்று படம் வந்தால் தானே அடுத்தடுத்து படங்களில் புக் ஆகி லைப்பில் செட்டில் ஆகலாம். நீண்ட நாளாய் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கித் தவித்து, யாராலும் சீண்டப்படாமல் இருக்கும் தீண்ட தீண்ட படம் முழுக்க கிளாமர் குதிரையாய் ஓடிக் களைத்திருக்கிறார் ஷ்ராவ்யா. இந்தப் படத்தின் இயக்குனர் ஏ.பி.முகனுக்கும், ஷ்ராவ்யாவுக்கும் படப்பிடிப்பின்போது திடீரென மோதல் ஏற்பட்டு விட்டது. இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர். இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது எல்லாம் பழைய கதை. தன்னை ரொம்ப ஆபாசமாக காட்டுகிறார்கள், நீலப்பட ரேஞ்சுக்கு என்னை படம் எடுத்து விட்டார் இயக்குனர் முகன் என்று பத்திரிக்கைகளுக்கு தாயாருடன் சேர்ந்து பரபரப்பாக பேட்டி கொடுத்து குண்டைப் போட்டார் ஷ்ராவ்யா. முகனும், ஷ்ராவ்யாவுக்குப் பதிலடி தரும் விதமாக பதில் பேட்டி கொடுத்தார். இந்த சண்டையால் ஷ்ராவ்யாவுக்கும், முகனுக்கும், அவர்களது படத்திற்கும் நல்ல பப்ளிசிட்டி கிடைத்தது. ஆனால், அது நெகட்டிவ் பப்ளிசிட்டி ஆகிப் போனது. பின்னர் சமரசமாகி ஒத்துழைப்பு தந்தார் ஷ்ராவ்யா. ஆனால், படத்தை மேற்கொண்டு நகர்த்த காசு தான் இல்லை. இந்தப் படத்தில் தான் காட்டிய கடும் கவர்ச்சியான ஸ்டில்கள் வெளியாகியும் கூட ஷ்ராவ்யாவுக்கு ஒரு படமும் புதிதாக புக் ஆகவில்லை. அவரது வாயைப் பார்த்து தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பயப்படுவதுதான் காரணமாம். தீண்ட தீண்டவில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஷ்ராவ்யா போட்டுள்ள ஆட்டம், பாட்டின் வரிகளும், மோக கிக்கரை ஒரே உதையில் ஸ்டார்ட் பண்ணி, ஹை ஸ்பீடில் போக வைக்குமாம். தான் நடித்த மிக இப்படிப்பட்ட அருமையான படம் தாமதமாவதால், ஷ்ராவ்யா ரொம்ப டென்ஷனாக உள்ளார். இந்தப் படம் வந்தாலாவது தன்னுடைய கிளாமரைப் பார்த்து கிறங்கிப் போய் ஏதாவது சான்ஸ் வராதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார் ஷ்ராவ்யா. ஆட்டிய கையும், காலும் சும்மா இருக்க முடியாததால், இப்போது பி.எஸ்.என்.எல். விளம்பரங்களில் அம்மணி தலை காட்டி வருகிறார். பலான படம்: இயக்குனர் மீது நடிகை புகார்

    By Staff
    |

    முழுக் கவர்ச்சியில் முக்காட்டம் போட்டு நடித்துள்ள தீண்டத் தீண்ட படம் வெளியாவது, தாமதம் ஆவதால் டென்ஷனாக இருக்கிறார் ஷ்ராவ்யா.

    பெயரலேயே காந்தத்தைப் போட்டு கவர்ந்திழுக்கும் ஷ்ராவ்யா, தமிழுக்கு வந்தபோது புதுசாக இருந்தார்.

    தீண்டத் தீண்ட என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் ஷ்ராவ்யா இதில் கவர்ச்சியில் குச்சிப்புடி ஆடியுள்ளார். ஆனால், இந்தப் படத்தின் தயாரிப்புப் பணி ஒரு வருடத்துக்கும் மேலாக அப்படியே நின்று போனதால் பிலிம்ரோலைப் போலவே ஷ்ராவ்யாவும் பழசாகி வருகிறார்.

    இது தான் ஷ்ராவ்யாவுக்கும் கவலையாம். சட்டு புட்டு என்று படம் வந்தால் தானே அடுத்தடுத்து படங்களில் புக் ஆகி லைப்பில் செட்டில் ஆகலாம்.

    நீண்ட நாளாய் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கித் தவித்து, யாராலும் சீண்டப்படாமல் இருக்கும் தீண்ட தீண்ட படம் முழுக்க கிளாமர் குதிரையாய் ஓடிக் களைத்திருக்கிறார் ஷ்ராவ்யா.

    இந்தப் படத்தின் இயக்குனர் ஏ.பி.முகனுக்கும், ஷ்ராவ்யாவுக்கும் படப்பிடிப்பின்போது திடீரென மோதல் ஏற்பட்டு விட்டது. இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர். இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது எல்லாம் பழைய கதை.


    தன்னை ரொம்ப ஆபாசமாக காட்டுகிறார்கள், நீலப்பட ரேஞ்சுக்கு என்னை படம் எடுத்து விட்டார் இயக்குனர் முகன் என்று பத்திரிக்கைகளுக்கு தாயாருடன் சேர்ந்து பரபரப்பாக பேட்டி கொடுத்து குண்டைப் போட்டார் ஷ்ராவ்யா.

    முகனும், ஷ்ராவ்யாவுக்குப் பதிலடி தரும் விதமாக பதில் பேட்டி கொடுத்தார்.

    இந்த சண்டையால் ஷ்ராவ்யாவுக்கும், முகனுக்கும், அவர்களது படத்திற்கும் நல்ல பப்ளிசிட்டி கிடைத்தது. ஆனால், அது நெகட்டிவ் பப்ளிசிட்டி ஆகிப் போனது.

    பின்னர் சமரசமாகி ஒத்துழைப்பு தந்தார் ஷ்ராவ்யா. ஆனால், படத்தை மேற்கொண்டு நகர்த்த காசு தான் இல்லை.

    இந்தப் படத்தில் தான் காட்டிய கடும் கவர்ச்சியான ஸ்டில்கள் வெளியாகியும் கூட ஷ்ராவ்யாவுக்கு ஒரு படமும் புதிதாக புக் ஆகவில்லை.


    அவரது வாயைப் பார்த்து தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பயப்படுவதுதான் காரணமாம்.

    தீண்ட தீண்டவில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஷ்ராவ்யா போட்டுள்ள ஆட்டம், பாட்டின் வரிகளும், மோக கிக்கரை ஒரே உதையில் ஸ்டார்ட் பண்ணி, ஹை ஸ்பீடில் போக வைக்குமாம்.

    தான் நடித்த மிக இப்படிப்பட்ட அருமையான படம் தாமதமாவதால், ஷ்ராவ்யா ரொம்ப டென்ஷனாக உள்ளார்.

    இந்தப் படம் வந்தாலாவது தன்னுடைய கிளாமரைப் பார்த்து கிறங்கிப் போய் ஏதாவது சான்ஸ் வராதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார் ஷ்ராவ்யா.

    ஆட்டிய கையும், காலும் சும்மா இருக்க முடியாததால், இப்போது பி.எஸ்.என்.எல். விளம்பரங்களில் அம்மணி தலை காட்டி வருகிறார்.

    பலான படம்: இயக்குனர் மீது நடிகை புகார்
    ஆபாச படம்: ஸ்ராவியா புகாரை மறுக்கும் இயக்குனர்

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X