ஆபாச சிம்பு-ஆவேச ரீமா! சிம்பு கொடுத்த டிரஸ் படு ஆபாசமாக இருப்பதாக கூறி அக்காட்சியில் நடிக்க மறுத்து,சிம்புவுடன் காரசாரமாக சண்டை போட்டார் ரீமா சென். இதனால் வல்லவன் சூட்டிங்ஸ்பாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தேனப்பன் தயாரிப்பில், சிம்புவின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் நீண்டநாட்களாக உருவாகி வரும் வல்லவன் படப்பிடிப்பு ஆரம்பம் முதலே பல்வேறுசர்ச்சைகளை சந்தித்து வருகிறது.முதலில் நயனதாராவின் உதட்டைக் கடித்து சிம்பு கொடுத்த போஸ் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது.அதன் பின்னர் படப்பிடிப்பை சிம்பு நடத்தும் விதம் குறித்தும் சர்ச்சை கிளம்பியது. ஒருநாளைக்கு ஒரு காட்சி என்ற ரீதியில் படு நிதானமாக படப்பிடிப்பை நடத்தியதால்தயாரிப்பாளர் தேனப்பனுக்கு ஏகப்பட்ட பொருள் இழப்பும், கால விரயமும்ஏற்படுவதாக பிரச்சினை கிளம்பியது. சிம்பு போகும் வேகத்தைப் பார்த்து மிரண்டு போன தேனப்பன், படத்தை சிம்புவுக்கேவிற்று விட்டதாகக் கூட செய்திகள் வந்தன.இதைத் தொடர்ந்து ரீமா சென்னுக்கும், சிம்புவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. சிம்பு ஒருடைரக்டரே இல்லை என்று ஆவேசமாக ரீமா சென் கூறினார். பதிலுக்கு ரீமா சென் ஒருநடிகையே கிடையாது என்று சிம்புவும் அதிரடியாக பேட்டி கொடுத்தார்.சிம்புவை பாராட்டுவது போல வாரிவிட்டு பேட்டிகள் தர ஆரம்பித்தார் ரீமா சென்.இப்படியாக பல சிக்கல்களுக்கு இடையே வல்லவன் படப்பிடிப்பு படு மெதுவாகநடந்து வந்தது. ஒரு கட்டத்தில் படப்பிடிப்பே நின்று போனது. தற்போது மீண்டும்படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் சிம்பு.இந் நிலையில் புதிதாக ஒரு சர்ச்சை. சமீபத்தில் சிம்பு, ரீமா சென், நயனதாராஆகியோர் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாம். பாடல் காட்சியில் நடிப்பதற்காக சிம்புவும், நயனதாராவும் தயாராக இருந்தனர். ரீமாசென்னும் செட்டுக்கு வந்து விட்டார். அவரிடம் இந்த டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்று சிம்பு ஒரு டிரஸ்ஸைக் கொடுத்துள்ளார்.அந்த டிரஸ்ஸைப் பார்த்ததும் ரீமா சென் அதிர்ச்சி அடைந்துள்ளார். மொத்தமே 3கர்சீப்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட டிரஸ்சாம் அது.உடலை அப்பட்டமாக வெளிக்காட்டும் வகையில் அந்த டிரஸ் இருந்ததால் அதைஎன்னால் போட முடியாது, ரொம்ப ஆபாசமாக எல்லாம் நடிக்க முடியாது என்றுகோபமாக கூறியுள்ளார் ரீமா.இதையடுத்து அவருக்கும் சிம்புவுக்கும் இடையே காரசாரமான விவாதம்நடந்துள்ளது. அது பின்னர் சண்டையாக மாறி இருவரும் தெருச் சண்டையில்ஈடுபடுவது போல வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டார்களாம். குழாயடிச் சண்டையாக அது மாறுவதற்குள் அங்கிருந்த மற்றவர்கள் இருவரையும்விலக்கி விட்டுள்ளனர்.கடுப்பாகிப் போன ரீமா அங்கிருந்து கிளம்பி தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குப்போய் விட்டார். பின்னர் சென்னையை விட்டே கிளம்பி மும்பைக்குப் போய்விட்டாராம். இதனால் வல்லவன் மீண்டும் சிக்கலில் தொக்கி நிற்கிறது.ரீமாவை சமாதானப்படுத்தும் முற்சியில் தயாரிப்பாளர் தேனப்பன் இறங்கியுள்ளார்.படத்தை முடிப்பதற்குள் தேனப்பன் கோணப்பனாகி ஆகிவிடுவார்போலிருக்கிறதோ..

By Staff

சிம்பு கொடுத்த டிரஸ் படு ஆபாசமாக இருப்பதாக கூறி அக்காட்சியில் நடிக்க மறுத்து,சிம்புவுடன் காரசாரமாக சண்டை போட்டார் ரீமா சென். இதனால் வல்லவன் சூட்டிங்ஸ்பாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தேனப்பன் தயாரிப்பில், சிம்புவின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் நீண்டநாட்களாக உருவாகி வரும் வல்லவன் படப்பிடிப்பு ஆரம்பம் முதலே பல்வேறுசர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

முதலில் நயனதாராவின் உதட்டைக் கடித்து சிம்பு கொடுத்த போஸ் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது.

அதன் பின்னர் படப்பிடிப்பை சிம்பு நடத்தும் விதம் குறித்தும் சர்ச்சை கிளம்பியது. ஒருநாளைக்கு ஒரு காட்சி என்ற ரீதியில் படு நிதானமாக படப்பிடிப்பை நடத்தியதால்தயாரிப்பாளர் தேனப்பனுக்கு ஏகப்பட்ட பொருள் இழப்பும், கால விரயமும்ஏற்படுவதாக பிரச்சினை கிளம்பியது.


சிம்பு போகும் வேகத்தைப் பார்த்து மிரண்டு போன தேனப்பன், படத்தை சிம்புவுக்கேவிற்று விட்டதாகக் கூட செய்திகள் வந்தன.

இதைத் தொடர்ந்து ரீமா சென்னுக்கும், சிம்புவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. சிம்பு ஒருடைரக்டரே இல்லை என்று ஆவேசமாக ரீமா சென் கூறினார். பதிலுக்கு ரீமா சென் ஒருநடிகையே கிடையாது என்று சிம்புவும் அதிரடியாக பேட்டி கொடுத்தார்.

சிம்புவை பாராட்டுவது போல வாரிவிட்டு பேட்டிகள் தர ஆரம்பித்தார் ரீமா சென்.

இப்படியாக பல சிக்கல்களுக்கு இடையே வல்லவன் படப்பிடிப்பு படு மெதுவாகநடந்து வந்தது. ஒரு கட்டத்தில் படப்பிடிப்பே நின்று போனது. தற்போது மீண்டும்படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் சிம்பு.

இந் நிலையில் புதிதாக ஒரு சர்ச்சை. சமீபத்தில் சிம்பு, ரீமா சென், நயனதாராஆகியோர் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாம்.


பாடல் காட்சியில் நடிப்பதற்காக சிம்புவும், நயனதாராவும் தயாராக இருந்தனர். ரீமாசென்னும் செட்டுக்கு வந்து விட்டார். அவரிடம் இந்த டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்று சிம்பு ஒரு டிரஸ்ஸைக் கொடுத்துள்ளார்.

அந்த டிரஸ்ஸைப் பார்த்ததும் ரீமா சென் அதிர்ச்சி அடைந்துள்ளார். மொத்தமே 3கர்சீப்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட டிரஸ்சாம் அது.

உடலை அப்பட்டமாக வெளிக்காட்டும் வகையில் அந்த டிரஸ் இருந்ததால் அதைஎன்னால் போட முடியாது, ரொம்ப ஆபாசமாக எல்லாம் நடிக்க முடியாது என்றுகோபமாக கூறியுள்ளார் ரீமா.

இதையடுத்து அவருக்கும் சிம்புவுக்கும் இடையே காரசாரமான விவாதம்நடந்துள்ளது. அது பின்னர் சண்டையாக மாறி இருவரும் தெருச் சண்டையில்ஈடுபடுவது போல வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டார்களாம்.


குழாயடிச் சண்டையாக அது மாறுவதற்குள் அங்கிருந்த மற்றவர்கள் இருவரையும்விலக்கி விட்டுள்ளனர்.

கடுப்பாகிப் போன ரீமா அங்கிருந்து கிளம்பி தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குப்போய் விட்டார். பின்னர் சென்னையை விட்டே கிளம்பி மும்பைக்குப் போய்விட்டாராம். இதனால் வல்லவன் மீண்டும் சிக்கலில் தொக்கி நிற்கிறது.

ரீமாவை சமாதானப்படுத்தும் முற்சியில் தயாரிப்பாளர் தேனப்பன் இறங்கியுள்ளார்.

படத்தை முடிப்பதற்குள் தேனப்பன் கோணப்பனாகி ஆகிவிடுவார்போலிருக்கிறதோ..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X