Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஷூட்டிங்கில் அழுத சிவகார்த்திகேயன்: சமாதானப்படுத்திய இயக்குனர்
பாண்டிராஜ் இயக்கத்தில் விமல், சிவ கார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, சூரி உள்ளிட்டோர் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து வருகின்றனர். படத்தில் சிவ கார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்கிறார் மனோஜ் குமார். அண்மையில் ஷூட்டிங் திருச்சியில் நடந்தது.
அப்போது மனோஜ் குமார் தான் சிறு வயதில் பட்ட கஷ்டங்களை தனது மகனிடம் உணர்ச்சி பொங்க கூறுவது போலவும் அதை சின்சியராகக் கேட்டுவிட்டு சிவகார்த்திகேயன் சிரித்துக் கொண்டே ஓடுவது போன்றும் காட்சியமைக்கப்பட்டது. அந்த காட்சி படமாக்கப்பட்டபோது மனோஜ் குமார் சொல்வதைக் கேட்ட சிவகார்த்திகேயன் சிரிப்பதற்கு பதிலாக அழுதுவிட்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இயக்குனர் அவரிடம் என்னாச்சு என்று கேட்க, இல்லை மனோஜ் குமார் உணர்ச்சி பொங்க பேசியதைக் கேட்டதும் தனது அப்பா ஞாபகம் வந்துவிட்டது என்றாராம். அப்புறம் அவரை சமாதானப்படுத்தி சில மணி நேரம் கழித்து அந்த காட்சியை படமாக்கியுள்ளனர்.