பலாத்காரம் செய்யப்பட்ட சோஹா... கதறி அழுத பரிதாபம்!

அதாவது படத்தில் பலாத்காரம் செய்வது போல எடுக்கப்பட்ட காட்சியில் நடித்ததால், அதன் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் அழுது விட்டாராம் சோஹா.
சைப் அலிகானின் தங்கச்சிதான் சோஹா. இவர் சமீபத்தில் ஒரு புதிய படத்திற்கான ஷூட்டிங்கில் பங்கேற்றபோது பலாத்கார காட்சியொன்றைப் படமாக்கினர். அதில் நடித்தபோது உண்மையிலேயே பதறிப் போய் விட்டாராம் சோஹா. மேலும் காட்சியை படமாக்கி முடித்தும் அழுது விட்டாராம்.
குழந்தைகள் கடத்தல் குறித்த படம் இது. இதில் என்ஆர்ஐ வேடத்தில் நடிக்கிறார் சோஹா. அதில் ஒரு குண்டர் கும்பல் இவரை பலாத்காரம் செய்வது போல காட்சி வருகிறதாம். அதில் நடித்து முடித்த பிறகுதான் ஓவென்று அழுதாராம் சோஹா.
இந்தக் காட்சியைப் படமாக்கியபோது இயக்குநர், கேமராமேன் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே அரங்கில் இருந்தனராம். காட்சியைப் படமாக்கியபோது சோஹா உடம்பில் நிஜமாகவே சிராய்ப்புகள் ஏற்பட்டு விட்டதாம். மருந்து போட்டுக் கொண்டு பின்னர் ரெஸ்ட் எடுத்தாராம் சோஹா...


Click it and Unblock the Notifications











