twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுனிதாவின் பை-டூ சத்யராஜுடன் 6.2 படத்தில் ஆட்டம் போட்ட சுனிதா வர்மா, அதன் பிறகு கன்னடத்து பக்கம் ஒதுங்கி கலாய்த்துக்கொண்டிருந்தார். தற்போது தமிழில் இரண்டு படங்களில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து கோடம்பாக்கத்தில்அதிரடியாகக் கலக்கி வருகிறார்.ஸ்ரீ சைலம் மூவிஸ் என்னும் பட நிறுவனம் தமிழில் ஏய் அதை மட்டும் கேட்காதே என்னும் படத்தை தயாரித்து வருகிறது.இந்நிறுவனம் தெலுங்கில் பல படங்களை தயாரித்த பிரபல நிறுவனமாகும். இப்படத்தின் 75 சதவீத படப்பிடிப்புமுடிவடைந்துள்ளது.தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் தயாராகும் இப்படத்தின் நாயகன் நீரஜ், நாயகியாக சுனிதா வர்மா நடித்துள்ளார். இந்தபடத்தில் படு கிளாமராக நடித்து வரும் சுனிதா அடுத்தாக பை-டூ (அதாவது ஆளுக்குப் பாதி என்று அர்த்தமாம்) என்ற படத்தில்ஏவாள் ரேஞ்சுக்கு நடித்துக் கொண்டிருக்கிறார்.6.2 படத்தில் ரப்பர் போல வளைந்து வளைந்து ஆட்டம் போட்ட சுனிதா வர்மாவிற்கு உண்மையிலேயே டான்ஸே தெரியாதாம்.ஸ்பாட்டில் சொல்லித் தருவதை அப்படியே செய்கிறராம். நினைச்சபடி வளையறமாதிரி உடம்பை ஆண்டவன் கொடுத்திருக்கான்என்று சொல்லும் சுனிதா தனக்கு தமிழ் மீது பற்று அதிகம் என்கிறார்.இவரது சொந்த ஊர் கேரளா, வளர்ந்தது ஆந்திரா. நடிப்பது தமிழ், கன்னடம் படங்களில்.பைடூ படத்தில் கதாநாயகன், கதாநாயகியை தவிர வேறு பாத்திரங்களே கிடையாதாம். அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு இளம்ஜோடிதனிமையில் சிக்கிக் கொள்கிறது. அந்த ஜோடி வேறு என்ன செய்யும்? காதல் தான் செய்யும்.தனிமை, காடு, அருவி என்ற அட்மாஸ்பியரில் காதல் ஜோடி வேறு என்னதான் செய்யும்? அதைத் தான் செய்யும். ஒரு ஜோடியின்சூடான காதல் விளையாட்டுக்களைத் தான் பை டூ என்ற பெயரில் படமாக்கி வருகிறார்கள்.கூடவே அவ்வப்போது கதாநாயகியை பாம்பு, புலி ஆகியவை வதம் செய்யப் பார்ப்பது, அப்படியே ஹீரோ பாய்ந்து போய்காப்பாற்றிவிட்டு ஒரு கிக் பார்வை பார்த்தவுடன், அருவியில் இருவரும் ஒன்றாக குளித்து விளையாடி ஆடிப் பாடுவது எனயதார்த்தமான காட்டுக் காதல் தான் இந்தப் படமும்.படத்தின் ஸ்பெஷாலிட்டி சுனிதா காட்டியிருக்கும் அதீதமான கிளாமர் தான். கவர்ச்சியில் கிளர்ச்சியூட்டி வருகிறாராம் சுனிமா.படு கிளாமராக நடித்துள்ள சுனிதா, கதைக்கு தேவையான கிளாமரைத் தான் காட்டியுள்ளேன் என்கிறார். கேரளாவில் சாலக்குடிஅருகே உள்ள அடர்ந்த காட்டில் சிங்கம், புலி, யானை, கரடி, குரங்கு, பாம்பு மற்றும் பல விலங்குகளுடன் சுனிதா நடித்துவருகிறார்.மலைப்பாம்பு ஒன்று சுனிதா வர்மாவை சுற்றி வளைத்த காட்சியில் அவர் ரொம்பவே துணிச்சலாகவே நடித்தாராம். ஆனால்படக்குழுவினருக்குத் தான் நெஞ்சு படபடத்து மூச்சு முட்டிவிட்டதாம். சுனிதாவின் ஐஸ்கிரீம் உடலை பாம்பு தொல்லை தராமல்சுற்றிப் பார்த்துவிட்டு கீழிறங்கிவிட்டதாம்.கன்னடத்தில் 4 படங்களை இயக்கிவுள்ள துவாரகி ராகவன் இந்த படத்தை இயக்குகிறார். புதுமையான காதல் கதையான இந்தபடத்திற்கு கிருஷ்ணகுமார் வசனம் எழுதியுள்ளார். இந்த படத்துக்காக வைரமுத்து எழுதிய பாடல்களுக்கு விஜய் ஆண்டனிஇசையமைக்கிறார்.

    By Staff
    |

    சத்யராஜுடன் 6.2 படத்தில் ஆட்டம் போட்ட சுனிதா வர்மா, அதன் பிறகு கன்னடத்து பக்கம் ஒதுங்கி கலாய்த்துக்கொண்டிருந்தார். தற்போது தமிழில் இரண்டு படங்களில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து கோடம்பாக்கத்தில்அதிரடியாகக் கலக்கி வருகிறார்.

    ஸ்ரீ சைலம் மூவிஸ் என்னும் பட நிறுவனம் தமிழில் ஏய் அதை மட்டும் கேட்காதே என்னும் படத்தை தயாரித்து வருகிறது.இந்நிறுவனம் தெலுங்கில் பல படங்களை தயாரித்த பிரபல நிறுவனமாகும். இப்படத்தின் 75 சதவீத படப்பிடிப்புமுடிவடைந்துள்ளது.

    தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் தயாராகும் இப்படத்தின் நாயகன் நீரஜ், நாயகியாக சுனிதா வர்மா நடித்துள்ளார். இந்தபடத்தில் படு கிளாமராக நடித்து வரும் சுனிதா அடுத்தாக பை-டூ (அதாவது ஆளுக்குப் பாதி என்று அர்த்தமாம்) என்ற படத்தில்ஏவாள் ரேஞ்சுக்கு நடித்துக் கொண்டிருக்கிறார்.


    6.2 படத்தில் ரப்பர் போல வளைந்து வளைந்து ஆட்டம் போட்ட சுனிதா வர்மாவிற்கு உண்மையிலேயே டான்ஸே தெரியாதாம்.ஸ்பாட்டில் சொல்லித் தருவதை அப்படியே செய்கிறராம். நினைச்சபடி வளையறமாதிரி உடம்பை ஆண்டவன் கொடுத்திருக்கான்என்று சொல்லும் சுனிதா தனக்கு தமிழ் மீது பற்று அதிகம் என்கிறார்.

    இவரது சொந்த ஊர் கேரளா, வளர்ந்தது ஆந்திரா. நடிப்பது தமிழ், கன்னடம் படங்களில்.

    பைடூ படத்தில் கதாநாயகன், கதாநாயகியை தவிர வேறு பாத்திரங்களே கிடையாதாம். அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு இளம்ஜோடிதனிமையில் சிக்கிக் கொள்கிறது. அந்த ஜோடி வேறு என்ன செய்யும்? காதல் தான் செய்யும்.


    தனிமை, காடு, அருவி என்ற அட்மாஸ்பியரில் காதல் ஜோடி வேறு என்னதான் செய்யும்? அதைத் தான் செய்யும். ஒரு ஜோடியின்சூடான காதல் விளையாட்டுக்களைத் தான் பை டூ என்ற பெயரில் படமாக்கி வருகிறார்கள்.

    கூடவே அவ்வப்போது கதாநாயகியை பாம்பு, புலி ஆகியவை வதம் செய்யப் பார்ப்பது, அப்படியே ஹீரோ பாய்ந்து போய்காப்பாற்றிவிட்டு ஒரு கிக் பார்வை பார்த்தவுடன், அருவியில் இருவரும் ஒன்றாக குளித்து விளையாடி ஆடிப் பாடுவது எனயதார்த்தமான காட்டுக் காதல் தான் இந்தப் படமும்.

    படத்தின் ஸ்பெஷாலிட்டி சுனிதா காட்டியிருக்கும் அதீதமான கிளாமர் தான். கவர்ச்சியில் கிளர்ச்சியூட்டி வருகிறாராம் சுனிமா.


    படு கிளாமராக நடித்துள்ள சுனிதா, கதைக்கு தேவையான கிளாமரைத் தான் காட்டியுள்ளேன் என்கிறார். கேரளாவில் சாலக்குடிஅருகே உள்ள அடர்ந்த காட்டில் சிங்கம், புலி, யானை, கரடி, குரங்கு, பாம்பு மற்றும் பல விலங்குகளுடன் சுனிதா நடித்துவருகிறார்.

    மலைப்பாம்பு ஒன்று சுனிதா வர்மாவை சுற்றி வளைத்த காட்சியில் அவர் ரொம்பவே துணிச்சலாகவே நடித்தாராம். ஆனால்படக்குழுவினருக்குத் தான் நெஞ்சு படபடத்து மூச்சு முட்டிவிட்டதாம். சுனிதாவின் ஐஸ்கிரீம் உடலை பாம்பு தொல்லை தராமல்சுற்றிப் பார்த்துவிட்டு கீழிறங்கிவிட்டதாம்.

    கன்னடத்தில் 4 படங்களை இயக்கிவுள்ள துவாரகி ராகவன் இந்த படத்தை இயக்குகிறார். புதுமையான காதல் கதையான இந்தபடத்திற்கு கிருஷ்ணகுமார் வசனம் எழுதியுள்ளார். இந்த படத்துக்காக வைரமுத்து எழுதிய பாடல்களுக்கு விஜய் ஆண்டனிஇசையமைக்கிறார்.

      Read more about: sunitha and abhai in bitwo
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X