twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுனிதாவின் உம்மா! உயிர் பிழைக்க ஆக்சிஜன் தேவை, ஆனால் உம்மா கொடுத்து உயிர் காக்க முடியுமா?முடியும் என்று சொல்லியுள்ளார் பைடூ பட இயக்குநர்.எல்லோர் முன்னிலையிலும் தன்னை இழுத்துப் பிடித்து பச்சக் பச்சக் என்றுஅழுத்தமாக உம்மா கொடுத்தார் என்று பாப் பாடகர் டாலர் மெஹந்தியின் தம்பிமைகா சிங் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார் கவர்ச்சி புயல் ராக்கி சாவந்த்.ராக்கி சாவந்த் வாங்கிய முத்தம் குறித்து பரபரப்பாக எல்லோரும் அலசிக்கொண்டிருக்கையில், பைடூ படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு முத்தக் காட்சிகோலிவுட்டை பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறது. துவாரகி பாலன் இயக்கத்தில் உருவாகும் பைடூ படத்தில் ரெண்டே ரெண்டு பேர்தான்.நாயகனும், நாயகியும் மட்டும்தான் படம் முழுக்க வருகிறார்கள். சுனிதா வர்மாதான்நாயகி. படம் முழுக்க கவர்ச்சியை இறைத்து நடித்துள்ளாராம் சுனிதா.6.2 படத்தில் கிளாமரை கோடிட்டுக் காட்டியவர், பைடூவில் பளபளவெனவருகிறாராம். முழுக்க முழுக்க வனப்பகுதியில் இப்படத்தை சுட்டிருக்கிறார்கள்.படத்தில் ஒரு காட்சி. அதாவது, ஹீரோ மயங்கிக் கிடக்கிறார்.மூச்சு விடுவதில் சிரமப்படுகிறார். அந்தக் காட்டில் நல்ல காற்றுக்கு எங்கே போவது.பார்க்கிறார் நாயகி சுனிதா வர்மா. தனது வாயால் ஹீரோவின் வாயை மூடி, தனதுமூச்சுக் காற்றை ஹீரோவுக்குக் கொடுக்கிறார்.இந்தக் காட்சி படத்திலேயே மிகவும் முக்கியமான காட்சி என்று கூறும் சுனிதா வர்மா,இதை பார்ப்பவர்கள் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளலாம். முத்தம்என்றும் எடுக்கலாம், உயிர் காக்கும் முதலுதவி என்றும் சொல்லலாம்.என்னைப் பொருத்தவரை இதை முதலுதவி என்றுதான் சொல்வேன். அவசரத்திற்கு இப்படிப்பட்ட முத்த சிகிச்சை கொடுப்பதில் தவறே இல்லை. இந்தக்காட்சியில் ஆபாசம் இருக்காது, கிளாமர் இருக்காது.ஆனால் நிச்சயம் உயிரோட்டம் இருக்கும் என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார் சுனிதா.ராக்கி சாவந்த் கிஸ் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சுனிதாவின் உதட்டைநோண்டியபோது, பொது இடத்தில் முத்தம் கொடுத்துக் கொள்வது சாதாரணமாகவிட்டது. இதே ராக்கி சாவந்த் பலமுறை பலருக்கு பொது இடத்தில் வைத்து கிஸ்கொடுத்துள்ளார்.ஆனால் ஒருவருடைய விருப்பம் இல்லாமல் எதையும் செய்யக் கூடாது முத்தம்கொடுப்பது உள்பட என்பது எனது தனிப்பட்ட கருத்து என்று சுதாரிப்பாக பதில்அளித்தார் சுனிதா.சுனிதாவுக்கு இப்போது புதுப் படம் ஒன்று வந்துள்ளது. அம்சவிர்தன் ஜோடியாக பிறகுஎன்ற படத்தில் நடிக்கப் போகிறார் சுனிதா. ராஜேந்தர், மணிவண்ணன் ஆகியோரிடம்உதவியாளராக இருந்த ஜீவா படத்தை இயக்குகிறார்.காதலும், ஆக்ஷனும் கலந்த கதையாம் பிறகு. இப்படத்தில் அம்சவர்தனுக்கு இரண்டுஜோடிகள். சுனிதா வர்மா தவிர கீர்த்தி சாவ்லாவும் இருக்கிறார். இருவரும் கிளாமரில்கிண்டி கிழங்கெடுக்கக் கூடியவர்கள் என்பதால் படத்தில் கிளாமர் காட்சிகளுக்குவரைமுறையே இருக்காது என நம்பலாம்.இப்படத்தில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் சங்கீதா (அதாங்க நம்ம ரசிகா)செமையான ஒரு குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போடுகிறாராம். ஸ்ரீகாந்த் தேவாதான்மியூசிக் போடவுள்ளார்.இளமைத் துள்ளலுடன் உருவாகப் போகும் பிறகு, அட்டகாசமான நடிப்பு பிளஸ்கிளாமரில் உருவாகியுள்ள பைடூ ஆகிய இரண்டு படங்களுமே தனக்கு பெரியபிரேக்கைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் சுனிதா. தரிசிக்க காத்திருப்போம்!

    By Staff
    |

    உயிர் பிழைக்க ஆக்சிஜன் தேவை, ஆனால் உம்மா கொடுத்து உயிர் காக்க முடியுமா?முடியும் என்று சொல்லியுள்ளார் பைடூ பட இயக்குநர்.

    எல்லோர் முன்னிலையிலும் தன்னை இழுத்துப் பிடித்து பச்சக் பச்சக் என்றுஅழுத்தமாக உம்மா கொடுத்தார் என்று பாப் பாடகர் டாலர் மெஹந்தியின் தம்பிமைகா சிங் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார் கவர்ச்சி புயல் ராக்கி சாவந்த்.

    ராக்கி சாவந்த் வாங்கிய முத்தம் குறித்து பரபரப்பாக எல்லோரும் அலசிக்கொண்டிருக்கையில், பைடூ படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு முத்தக் காட்சிகோலிவுட்டை பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறது.

    துவாரகி பாலன் இயக்கத்தில் உருவாகும் பைடூ படத்தில் ரெண்டே ரெண்டு பேர்தான்.நாயகனும், நாயகியும் மட்டும்தான் படம் முழுக்க வருகிறார்கள். சுனிதா வர்மாதான்நாயகி. படம் முழுக்க கவர்ச்சியை இறைத்து நடித்துள்ளாராம் சுனிதா.


    6.2 படத்தில் கிளாமரை கோடிட்டுக் காட்டியவர், பைடூவில் பளபளவெனவருகிறாராம். முழுக்க முழுக்க வனப்பகுதியில் இப்படத்தை சுட்டிருக்கிறார்கள்.படத்தில் ஒரு காட்சி. அதாவது, ஹீரோ மயங்கிக் கிடக்கிறார்.

    மூச்சு விடுவதில் சிரமப்படுகிறார். அந்தக் காட்டில் நல்ல காற்றுக்கு எங்கே போவது.பார்க்கிறார் நாயகி சுனிதா வர்மா. தனது வாயால் ஹீரோவின் வாயை மூடி, தனதுமூச்சுக் காற்றை ஹீரோவுக்குக் கொடுக்கிறார்.

    இந்தக் காட்சி படத்திலேயே மிகவும் முக்கியமான காட்சி என்று கூறும் சுனிதா வர்மா,இதை பார்ப்பவர்கள் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளலாம். முத்தம்என்றும் எடுக்கலாம், உயிர் காக்கும் முதலுதவி என்றும் சொல்லலாம்.

    என்னைப் பொருத்தவரை இதை முதலுதவி என்றுதான் சொல்வேன்.

    அவசரத்திற்கு இப்படிப்பட்ட முத்த சிகிச்சை கொடுப்பதில் தவறே இல்லை. இந்தக்காட்சியில் ஆபாசம் இருக்காது, கிளாமர் இருக்காது.


    ஆனால் நிச்சயம் உயிரோட்டம் இருக்கும் என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார் சுனிதா.

    ராக்கி சாவந்த் கிஸ் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சுனிதாவின் உதட்டைநோண்டியபோது, பொது இடத்தில் முத்தம் கொடுத்துக் கொள்வது சாதாரணமாகவிட்டது. இதே ராக்கி சாவந்த் பலமுறை பலருக்கு பொது இடத்தில் வைத்து கிஸ்கொடுத்துள்ளார்.

    ஆனால் ஒருவருடைய விருப்பம் இல்லாமல் எதையும் செய்யக் கூடாது முத்தம்கொடுப்பது உள்பட என்பது எனது தனிப்பட்ட கருத்து என்று சுதாரிப்பாக பதில்அளித்தார் சுனிதா.

    சுனிதாவுக்கு இப்போது புதுப் படம் ஒன்று வந்துள்ளது. அம்சவிர்தன் ஜோடியாக பிறகுஎன்ற படத்தில் நடிக்கப் போகிறார் சுனிதா. ராஜேந்தர், மணிவண்ணன் ஆகியோரிடம்உதவியாளராக இருந்த ஜீவா படத்தை இயக்குகிறார்.

    காதலும், ஆக்ஷனும் கலந்த கதையாம் பிறகு. இப்படத்தில் அம்சவர்தனுக்கு இரண்டுஜோடிகள். சுனிதா வர்மா தவிர கீர்த்தி சாவ்லாவும் இருக்கிறார். இருவரும் கிளாமரில்கிண்டி கிழங்கெடுக்கக் கூடியவர்கள் என்பதால் படத்தில் கிளாமர் காட்சிகளுக்குவரைமுறையே இருக்காது என நம்பலாம்.


    இப்படத்தில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் சங்கீதா (அதாங்க நம்ம ரசிகா)செமையான ஒரு குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போடுகிறாராம். ஸ்ரீகாந்த் தேவாதான்மியூசிக் போடவுள்ளார்.

    இளமைத் துள்ளலுடன் உருவாகப் போகும் பிறகு, அட்டகாசமான நடிப்பு பிளஸ்கிளாமரில் உருவாகியுள்ள பைடூ ஆகிய இரண்டு படங்களுமே தனக்கு பெரியபிரேக்கைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் சுனிதா.

    தரிசிக்க காத்திருப்போம்!

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X