twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மூணாறு ஸ்வாதி! தேயிலை மணக்கும் மூணாறு பின்னணியில், ஸ்வாதியை முக்கிய கேரக்டராககொண்டு, கமகமவென தயாராகி வருகிறது எழுதியதாரடி.ரொம்ப நாளைக்குப் பிறகு ஸ்வாதி தலை பிளஸ் உடல் காட்டி நடிக்க வருகிறார். ஒருகாலத்தில் விஜய், அஜீத்துடன் ஆட்டம் போட்டவர் ஸ்வாதி. ஆனால் இன்று குட்டிகுட்டி ரோல்களில் நடிக்க வேண்டிய நிலை. ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என காத்துக் கிடந்த ஸ்வாதிக்கு ஒரு படம் வந்துசேராததால், சரி வருகிற கேரக்டரை வைத்துப் பிழைப்பது என்ற முடிவுக்கு வந்தார்.அப்போதுதான் எழுதியதாரடி பட வாய்ப்பு வந்தது. லபக்கெனப் பிடித்துக் கொண்டார்.இப்படத்தில் ஸ்வாதிக்கு நல்ல ரோலாம். டீ எஸ்டேட்டுகளை கதைக் களமாக கொண்டபடம் என்றால் மூணாறு பக்கம் படத்தை மொத்தமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஹீரோவாக ரமணா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வருகிறவர் மான்ஸி. ஆனால்ஸ்வாதிக்குத்தான் வெயிட்டான ரோலாம். கிட்டத்தட்ட படத்தைத் தூக்கி நிறுத்தும்பாத்திரமாம்.ஸ்வாதியும் லயித்து, ரசித்து நடித்துள்ளாராம். படத்தின் ஹீரோ, ஹீரோயினை நேரில்பார்க்காமல் காதலிக்கிறார். தான் மனதுக்குள் காதலித்த நாயகியைத் தேடி வருகிறார்.அவர் தனது நாயகியை கண்டுபிடிக்கிறாரா, கைப் பிடிக்கிறாரா என்பதுதான் படத்தின்கதை.இதில் ஸ்வாதியும் இடையில் குறுக்கிடுகிறார். இறுதியில் யாரை கைப் பிடிக்கிறார்என்பதை படு அழகாக சொல்லியுள்ளாராம் இயக்குனர் பால்ரே (சத்யஜித் ரே மாதிரிஇவர் பால் ரே!)அழகான கவிதையாக ஸ்வாதி, கமகம டீயாக மான்ஸி என புதுக் கவிதை போலதயாராகி வருகிறது எழுதியதாரடி!

    By Staff
    |
    தேயிலை மணக்கும் மூணாறு பின்னணியில், ஸ்வாதியை முக்கிய கேரக்டராககொண்டு, கமகமவென தயாராகி வருகிறது எழுதியதாரடி.

    ரொம்ப நாளைக்குப் பிறகு ஸ்வாதி தலை பிளஸ் உடல் காட்டி நடிக்க வருகிறார். ஒருகாலத்தில் விஜய், அஜீத்துடன் ஆட்டம் போட்டவர் ஸ்வாதி. ஆனால் இன்று குட்டிகுட்டி ரோல்களில் நடிக்க வேண்டிய நிலை.

    ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என காத்துக் கிடந்த ஸ்வாதிக்கு ஒரு படம் வந்துசேராததால், சரி வருகிற கேரக்டரை வைத்துப் பிழைப்பது என்ற முடிவுக்கு வந்தார்.அப்போதுதான் எழுதியதாரடி பட வாய்ப்பு வந்தது. லபக்கெனப் பிடித்துக் கொண்டார்.

    இப்படத்தில் ஸ்வாதிக்கு நல்ல ரோலாம். டீ எஸ்டேட்டுகளை கதைக் களமாக கொண்டபடம் என்றால் மூணாறு பக்கம் படத்தை மொத்தமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஹீரோவாக ரமணா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வருகிறவர் மான்ஸி. ஆனால்ஸ்வாதிக்குத்தான் வெயிட்டான ரோலாம். கிட்டத்தட்ட படத்தைத் தூக்கி நிறுத்தும்பாத்திரமாம்.

    ஸ்வாதியும் லயித்து, ரசித்து நடித்துள்ளாராம். படத்தின் ஹீரோ, ஹீரோயினை நேரில்பார்க்காமல் காதலிக்கிறார். தான் மனதுக்குள் காதலித்த நாயகியைத் தேடி வருகிறார்.அவர் தனது நாயகியை கண்டுபிடிக்கிறாரா, கைப் பிடிக்கிறாரா என்பதுதான் படத்தின்கதை.

    இதில் ஸ்வாதியும் இடையில் குறுக்கிடுகிறார். இறுதியில் யாரை கைப் பிடிக்கிறார்என்பதை படு அழகாக சொல்லியுள்ளாராம் இயக்குனர் பால்ரே (சத்யஜித் ரே மாதிரிஇவர் பால் ரே!)

    அழகான கவிதையாக ஸ்வாதி, கமகம டீயாக மான்ஸி என புதுக் கவிதை போலதயாராகி வருகிறது எழுதியதாரடி!

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X