Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மழை, வெள்ளப் பெருக்கு, புலியின் அச்சுறுத்தல்! - ’ட்ரிப்’ படக்குழு எதிர்கொண்ட சவால்கள்
மிகச்சரியான திட்டமிடலும் துல்லியமான கணிப்புகளும் இருந்தால் நினைத்தபடி படப்பிடிப்பை நடத்தலாம் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு சாய் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் 'ட்ரிப்' திரைப்படம். கடந்த நவம்பர் மாதம் தலைக்கோணாவில் தொடங்கிய படப்பிடிப்பு, 25 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று முதல் கட்டத்தை நிறைவு செய்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது.
படம் குறித்து கூறிய இயக்குநர் டெனிஸ், "முதல் கட்ட படப்பிடிப்பின்போது பலத்த மழை, வெள்ளப் பெருக்கு என்று பல கடுமையான சவால்களை எதிர்கொண்டோம். ஆயினும் எந்தவித சமரசமும் இல்லாமல், நாங்கள் திட்டமிட்டபடியே படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்" என்றார்.
இப்பட்டி இயற்கை சீற்றத்தால் மிரட்டப்பட்ட படக்குழுவினரை புலி ஒன்றும் அச்சுறுத்தியிருக்கிறது. புலியின் திடீர் வருகையால் அச்சமடைந்த படக்குழுவினர் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் மிக பாதுகாப்பாக படப்பிடிப்பை நடத்தி முடித்தாலும், புலியின் அச்சுறுத்தலை இன்னமும் மறக்க முடியாமல் இருக்கிறார்களாம்.
இப்படி பலவிதமான சவால்களை எதிர்கொண்டாலும், உள்ளூர் வாசிகள், வன இலாக்கா அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்போடு, படப்பிடிப்பை வெற்றிகரமாகா முடித்தவர்கள், யோகி பாபு மற்றும் கருணாகரன் இருவரது கலகலப்பான பேச்சும் செயல்களும், பணியின் சுமையைக் குறைத்து சுகமானதாக மாற்றியதாக தெரிவிக்கும் பட்டக்குழுவினர், இவர்கள் இருவரும் வரும் அனைத்துக் காட்சிகளும் ரசிகர்களுக்கு சர்க்கரையாக இனிக்கும் என்றும் கூறுகிறார்கள்.