Don't Miss!
- News சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மழை, வெள்ளப் பெருக்கு, புலியின் அச்சுறுத்தல்! - ’ட்ரிப்’ படக்குழு எதிர்கொண்ட சவால்கள்
மிகச்சரியான திட்டமிடலும் துல்லியமான கணிப்புகளும் இருந்தால் நினைத்தபடி படப்பிடிப்பை நடத்தலாம் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு சாய் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் 'ட்ரிப்' திரைப்படம். கடந்த நவம்பர் மாதம் தலைக்கோணாவில் தொடங்கிய படப்பிடிப்பு, 25 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று முதல் கட்டத்தை நிறைவு செய்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது.
படம் குறித்து கூறிய இயக்குநர் டெனிஸ், "முதல் கட்ட படப்பிடிப்பின்போது பலத்த மழை, வெள்ளப் பெருக்கு என்று பல கடுமையான சவால்களை எதிர்கொண்டோம். ஆயினும் எந்தவித சமரசமும் இல்லாமல், நாங்கள் திட்டமிட்டபடியே படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்" என்றார்.
இப்பட்டி இயற்கை சீற்றத்தால் மிரட்டப்பட்ட படக்குழுவினரை புலி ஒன்றும் அச்சுறுத்தியிருக்கிறது. புலியின் திடீர் வருகையால் அச்சமடைந்த படக்குழுவினர் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் மிக பாதுகாப்பாக படப்பிடிப்பை நடத்தி முடித்தாலும், புலியின் அச்சுறுத்தலை இன்னமும் மறக்க முடியாமல் இருக்கிறார்களாம்.
இப்படி பலவிதமான சவால்களை எதிர்கொண்டாலும், உள்ளூர் வாசிகள், வன இலாக்கா அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்போடு, படப்பிடிப்பை வெற்றிகரமாகா முடித்தவர்கள், யோகி பாபு மற்றும் கருணாகரன் இருவரது கலகலப்பான பேச்சும் செயல்களும், பணியின் சுமையைக் குறைத்து சுகமானதாக மாற்றியதாக தெரிவிக்கும் பட்டக்குழுவினர், இவர்கள் இருவரும் வரும் அனைத்துக் காட்சிகளும் ரசிகர்களுக்கு சர்க்கரையாக இனிக்கும் என்றும் கூறுகிறார்கள்.