twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ. 40 கோடி படத்தில் வித்யா பாலன் வித்யா பாலன் நடிக்க ரூ. 40 கோடி பட்ஜெட்டில் ஹேய் பேபி என்ற பெயரில்பிரமாண்ட படம் ஒன்றை பிரபல இயக்குனரும், நடிகை தபுவின் முன்னாள்காதலருமான சஜித் நாடியத்வாலா தயாரிக்கிறார். இந்தியைக் கலக்கி வரும் வித்யா பாலன், தமிழுக்கு வரவும் சில வாய்ப்புகள்உருவானது. கமல்ஹாசனின் தசாவதாரத்தில் நடிக்க வைக்க வித்யா பாலனைஅணுகினார் கமல். ஆனால் வித்யாவின் கால்ஷீட் கிடைக்காததால் அது முடியாமல்போனது.இந்தியில் ஹாட்டஸ்ட் நடிகையாக மாறியுள்ள பாலக்காட்டு மாமி வித்யா பாலன்இப்போது பிரமாண்ட படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். ஹேய் பேபி என்றுபெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு ரூ. 40 கோடி பட்ஜெட் போட்டுள்ளாராம்நாடியத்வாலா.ஹேய் பேபி படத்தில் அக்ஷய்குமார், பர்தீன் கான், ரிதேஷ் தேஷ்முக், வித்யா பாலன்ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் சோதனை ஷூட்டிங் மும்பைஅருகே உள்ள மாத் தீவில் நடந்து வருகிறது.படத்தை இயக்குபவர் சாஜித் கான். இப்படம் குறித்து கான் கூறுகையில், எனக்காகவேஇப்படத்தை தயாரிக்கிறார் நாடியத்வாலா.40 கோடி ரூபாய் முதலீட்டைபோட்டுள்ளார். இதில் விஷூவல் எபக்ட்ஸ்க்காவே ரூ. 4.7 கோடியைசெலவிடவுள்ளோம். மோஷன் கேப்சர் என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திஇந்தக் காட்சிகளை படமாக்கவுள்ளோம் என்கிறார் கான்.மேட்ரிக்ஸ், பேப், பவர் ரேஞ்சர்ஸ் ஆகிய ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள நிக்நிக்கோலாய் என்ற நிபுணர்தான் இப்படத்தில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கவுள்ளாராம்.வழக்கமாக 3டி முறையில் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் படத்தில்தான்மோஷன் அனிமேஷனை செய்வார்கள். ஆனால் மோஷன் கேப்சர் முறையில்,நேரடியாக படப்பிடிப்பின்போதே அதை செய்து விட முடியும்.மாத் தீவில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள நாடியத்வாலா அடுத்துநியூசிலாந்தில் டெஸ்ட் ஷூட்டை நடத்தவுள்ளார். பணத்தை பணமாகவே கருதாமல்பீர் மாதிரி செலவிட்டு வருகிறாராம் நாடியத்வாலா.ஒரு காட்சிக்காக உதய்பூர் கோட்டையில் டெஸ்ட் ஷூட் வைக்க வேண்டும் என்றுகூறினாராம் சாஜித் கான். அது எதுக்கு என்று கேட்ட நாடியத்வாலா ரூ. 3 கோடியில்ஒரு சூப்பர் செட்டைப் போட்டுக் கொடுத்து விட்டாராம். அதில் 1,000 துணைநிடிகர்கள், 50 யானைகள், நான்கு ஹெலிகாப்டர்கள், மிகப் பெரிய மேடை, மிகப்பெரிய கலையரங்கம் ஆகியவற்றை வைத்து ஷூட் செய்தாராம் சாஜித் கான்.மிகப் பெரிய பட்ஜெட், மிக பிரமாண்டமான சூட்டிங் என பாலிவுட்டை தன் பக்கம்பார்க்க வைத்துள்ள நாடியத்வாலாவின் ஹேய் பேபிதான் இப்போதைக்கு பாலிவுட்டின்ஹாட் டாக்.கேக்க ரொம்ப நல்லா இருக்கு.. படத்துல கதை இருக்கா நாடியத்வாலா?? இல்லைவழக்கம் போல இந்தி ஜவ்வு தானா?

    By Staff
    |

    வித்யா பாலன் நடிக்க ரூ. 40 கோடி பட்ஜெட்டில் ஹேய் பேபி என்ற பெயரில்பிரமாண்ட படம் ஒன்றை பிரபல இயக்குனரும், நடிகை தபுவின் முன்னாள்காதலருமான சஜித் நாடியத்வாலா தயாரிக்கிறார்.

    இந்தியைக் கலக்கி வரும் வித்யா பாலன், தமிழுக்கு வரவும் சில வாய்ப்புகள்உருவானது. கமல்ஹாசனின் தசாவதாரத்தில் நடிக்க வைக்க வித்யா பாலனைஅணுகினார் கமல். ஆனால் வித்யாவின் கால்ஷீட் கிடைக்காததால் அது முடியாமல்போனது.

    இந்தியில் ஹாட்டஸ்ட் நடிகையாக மாறியுள்ள பாலக்காட்டு மாமி வித்யா பாலன்இப்போது பிரமாண்ட படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். ஹேய் பேபி என்றுபெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு ரூ. 40 கோடி பட்ஜெட் போட்டுள்ளாராம்நாடியத்வாலா.

    ஹேய் பேபி படத்தில் அக்ஷய்குமார், பர்தீன் கான், ரிதேஷ் தேஷ்முக், வித்யா பாலன்ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் சோதனை ஷூட்டிங் மும்பைஅருகே உள்ள மாத் தீவில் நடந்து வருகிறது.

    படத்தை இயக்குபவர் சாஜித் கான். இப்படம் குறித்து கான் கூறுகையில், எனக்காகவேஇப்படத்தை தயாரிக்கிறார் நாடியத்வாலா.40 கோடி ரூபாய் முதலீட்டைபோட்டுள்ளார். இதில் விஷூவல் எபக்ட்ஸ்க்காவே ரூ. 4.7 கோடியைசெலவிடவுள்ளோம். மோஷன் கேப்சர் என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திஇந்தக் காட்சிகளை படமாக்கவுள்ளோம் என்கிறார் கான்.

    மேட்ரிக்ஸ், பேப், பவர் ரேஞ்சர்ஸ் ஆகிய ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள நிக்நிக்கோலாய் என்ற நிபுணர்தான் இப்படத்தில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கவுள்ளாராம்.

    வழக்கமாக 3டி முறையில் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் படத்தில்தான்மோஷன் அனிமேஷனை செய்வார்கள். ஆனால் மோஷன் கேப்சர் முறையில்,நேரடியாக படப்பிடிப்பின்போதே அதை செய்து விட முடியும்.

    மாத் தீவில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள நாடியத்வாலா அடுத்துநியூசிலாந்தில் டெஸ்ட் ஷூட்டை நடத்தவுள்ளார். பணத்தை பணமாகவே கருதாமல்பீர் மாதிரி செலவிட்டு வருகிறாராம் நாடியத்வாலா.

    ஒரு காட்சிக்காக உதய்பூர் கோட்டையில் டெஸ்ட் ஷூட் வைக்க வேண்டும் என்றுகூறினாராம் சாஜித் கான். அது எதுக்கு என்று கேட்ட நாடியத்வாலா ரூ. 3 கோடியில்ஒரு சூப்பர் செட்டைப் போட்டுக் கொடுத்து விட்டாராம். அதில் 1,000 துணைநிடிகர்கள், 50 யானைகள், நான்கு ஹெலிகாப்டர்கள், மிகப் பெரிய மேடை, மிகப்பெரிய கலையரங்கம் ஆகியவற்றை வைத்து ஷூட் செய்தாராம் சாஜித் கான்.

    மிகப் பெரிய பட்ஜெட், மிக பிரமாண்டமான சூட்டிங் என பாலிவுட்டை தன் பக்கம்பார்க்க வைத்துள்ள நாடியத்வாலாவின் ஹேய் பேபிதான் இப்போதைக்கு பாலிவுட்டின்ஹாட் டாக்.

    கேக்க ரொம்ப நல்லா இருக்கு.. படத்துல கதை இருக்கா நாடியத்வாலா?? இல்லைவழக்கம் போல இந்தி ஜவ்வு தானா?

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X