இவரோட அலப்பரைக்கு அளவே இல்லையா?

சின்னத்திரையில் நடிக்கும்போதே கேமிராவை விட்டால் ஏ.சி. ரூம். அதைவிட்டு வெளியே வந்தால் ஏ.சி கார் என்று எந்நேரமும் ஏ.சி.யிலேயே குடியிருப்பார். இயக்குநரானபின்னர் வெயிலியே காயவேண்டியிருக்கிறது. 'நம்மால ஆகாதுப்பா இதெல்லாம்' என்று முதல் நாளே அலுத்துக் கொண்ட விஜய் ஆதிராஜ், தனக்கென்று குடை பிடிக்க தனி ஆளையே போட்டுவிட்டார் அப்புறம்.
ஸ்பாட்டில் இவர் அங்கும் இங்கும் ஓடியாடி டைரக்ட் பண்ணிக் கொண்டிருக்க, குடை பிடிக்கிற ஆள் இவர் ஓடும் திசையெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறாராம். இந்த காட்சியை மட்டுமே தனியாக ஷூட்டிங் எடுத்து வெளியிட்டால் இந்த வருடத்தின் மெகா வசூல் காமெடிப்படமாக இருக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
இதுதான் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பார்கள் என்பதோ !


Click it and Unblock the Notifications











