Don't Miss!
- Finance சென்செக்ஸ்-ஐ பதம்பார்த்த ஈரான் - இஸ்ரேல் விவகாரம்.. தேர்தல் நாளில் இப்படியா நடக்கனும்..!!
- News அதிமுக எங்கள் பக்கம் வரும்.. கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. வாக்களித்த பிறகு ஓபிஎஸ் பரபர பேட்டி
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாடல் படப்பிடிப்புடன் தொடங்கியது விஜய்யின் புதிய படம்!
சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் நேற்று தொடங்கியது.
கத்தி படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் புதிய படம் நவம்பர் 10-ம் தேதி தொடங்கும் என ஏற்கெனவே அறிவித்திருந்தோம். அதன்படி நேற்று இந்தப் படத்தின் ஷூட்டிங் கிழக்கு கடற்கரைச் சாலையில் தொடங்கியது.
இதற்கென இங்கு பிரமாண்ட ஒரு செட் அமைக்கப்பட்டிருந்தது. இந்த செட்டில்தான் பாடல் காட்சி படப்பிடிப்புடன் படம் தொடங்கியது.
இந்தப் பாடல் காட்சியில் 100 வெளிநாட்டு நடன கலைஞர்கள் விஜய்யுடன் பங்கேற்றனர்.
தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள சிம்புதேவன், டிசம்பர் மாத இறுதியில் முதல்கட்டப் படப்பிடிப்பை முடிக்கிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்கள். மேலும் ஸ்ரீதேவி, ‘நான் ஈ' சுதீப் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை நட்ராஜ் எனும் நட்டி கவனிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தை விஜய்யின் மேலாளர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார்.