Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் விபரீதம்.. டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டு ஜெயில்.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நெல்லையில் 'விருந்தாளி' ஷூட்டிங்!
நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசி, குற்றாலம, செங்கோட்டை, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கோபிகா இன்டர்ஷேனல் நிறுவனத்தின் சார்பில் விருந்தாளி எனும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த மைக்கேல் கதாநாயகனாகவும், 'அவள் பெயர் தமிழரசி' படத்தில் நடித்த தியானா கதாநாயகியாகவும் அறிமுகம் ஆகிறார்கள்.
மேலும் கஞ்சா கருப்பு, நாசர், பாலாசிங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தை கேரளாவின் புகழ்பெற்ற லோகிதாஸிடம் இயக்குநராகப் பணியாற்றிய உதயசங்கர் இயக்குகிறார்... வாட்டர்மேன் என்ற பெயரில்.
அஞ்சாதே படத்துக்கு ஸ்டன்ட் காட்சிகள் அமைத்த ஆக்சன் பிரகாஷ் இதிலும் பணியாற்றுகிறார். பூ படத்தில் இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்எஸ் குமரன், இசையமைக்கிறார். நா.முத்துகுமார் பாடல் எழுதியுள்ளார். இப்படத்தினை என்ஆர்ஐ ராஜேஷ் கோபிகா தயாரிக்கிறார்.
இப்படம் முழுக்க முழுக்க கிராமத்தில் வசிக்கும் நடுந்தர குடும்பத்தின் காதல் கதையாம். மொத்தம் 55 நாட்கள் இடைவிடாது இம்மாவட்டதிலேயே படப்பிடிப்பை நடத்தி முடித்து மே மாதம் திரைக்கு கொண்டு வரவுள்ளதாக குழுவினர் தெரிவித்தனர்.
கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை தேரடி தெருவில் காவல் துறை அனுமதி பெறாமலேயே படப்பிடிப்பு குழுவினர் முகாமிட்டனர். மேலும் நேற்று காலை முதல் மாலை வரை அப்பகுதியில் சண்டை காட்சி படமாக்கப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அதை தொடர்ந்து உள்ளூர் காவல்துறையின் அனுமதியோடு 8 போலீசாரை காவலுக்கு அழைத்து படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது.
-
பத்ம விருதுகள் வழங்கும் விழா.. குடியரசுத் தலைவர் கைகளால் விருதை பெற்றுக்கொண்டார் உஷா உதுப்
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்