Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
பாட்டுக் கட்டும் விசாலி
Click here for more images |
கவியரசு கண்ணதாசனின் மகள் விசாலி. கே.பாலச்சந்தரால் நடிகையாக அறிமுகமானவர். ஓரிரு படங்களில் நடித்துள்ள விசாலி பின்னர் நடிப்பை விட்டு விட்டு டிவி தொகுப்பாளினி ஆனார். பிறகு திருமணம் செய்து கொண்ட பின்னர் அதையும் விட்டு விட்டு வீட்டோடு ஐக்கியமானார்.
பெரிய இடைவெளிக்குப் பிறகு விசாலி மீண்டும் சினிமாவுக்குத் திரும்பியுள்ளார். இந்த முறை கவிதாயினியாக வந்துள்ளார்.
தந்தையைப் போலவே கவிதை எழுதும் திறமை படைத்தவரான விசாலி, முழு நேர பாடலாசிரியையாக மாறியுள்ளார். இவரது முதல் பாடல், இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'தனம்' படத்தில் இடம் பெறுகிறது. சங்கீதாதான் இப்படத்தின் நாயகி.
தேவதாசிப் பெண் வேடத்தில் இதில் சங்கீதா நடிக்கிறார். இப்படத்தில் விசாலியின் வரிகளில் உருவான
''கண்ணனுக்கு என்ன விருப்பம்
தினமும் உதிக்கும் பொன்மலரோ
இதழ்கள் உதிர்க்கும் சொல் மலரோ
சொல்லு கண்ணா சொல்லு கண்ணா'' என்று தொடங்கும் பாடலை சமீபத்தில் இளையராஜா பதிவு செய்துள்ளார். இப்பாடலை பவதாரணி பாடியுள்ளார்.
இதேபோல காதல் விழா என்ற படத்திலும் விசாலி பாடல் எழுதியுள்ளாராம்.
இனி தொடர்ந்து பாடல்களை எழுதப் போவதாக விசாலி கூறுகிறார். கவியரசுவின் வாரிசாயிற்றே, கவிதை சமைப்பதில் விசாலி நிச்சயம் சாதிப்பார் என்று நம்பலாம்.