Don't Miss!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'கத்திச்சண்டை'யால் காயம் பட்ட விஷால்... படக்குழுவினர் அதிர்ச்சி!
சென்னை: 'கத்திச்சண்டை' படத்தின் சண்டைக் காட்சியில் நடித்த விஷாலுக்கு தோள்பட்டையில் அடிபட்டது. எனினும் அதனைப் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மருதுவைத் தொடர்ந்து விஷால் தற்போது சுராஜ் இயக்கத்தில் 'கத்திச்சண்டை' படத்தில் நடித்து வருகிறார்.இதில் விஷாலுடன் இணைந்து தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கியபோது விஷாலின் தோள்பட்டையில் அவருக்கு அடிபட்டது.
இதனைத் தொடர்ந்து அருகிலிருந்த மருத்துவமனையில் விஷாலுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. காயம் பட்டாலும் கூட படப்பிடிப்பில் விஷால் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
இந்த விபத்து குறித்து விஷால் ''தோள்பட்டையில் அடிபட்டுள்ளது. பெரிய அளவில் காயமில்லை. மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
அடிபட்டும் விஷால் படப்பிடிப்பில் கலந்து கொண்டது படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்றொருபுறம் விஷாலின் மருது, 'ராயுடு' என்ற பெயரில் இன்று தெலுங்கு மொழியிலும் வெளியாகியிருக்கிறது. 500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான ராயுடுவுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.