Don't Miss!
- News செந்தில் பாலாஜி முதல் கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் எடுத்த ஆயுதத்தை வைத்தே அவர்களை காலி செய்யும் பாஜக
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
அடை மழையிலும் விடாமல் தொடர்ந்த விஷாலின் ஷூட்டிங்!
சென்னை: கன மழையையும் பொருட்படுத்தாமல் விஷாலின் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது
விஷால் ஒரே நேரத்தில் துப்பறிவாளன் மற்றும் இரும்புத்திரை ஆகிய படங்களில் நடித்து வந்தார். துப்பறிவாளன் சென்ற வருடமும், இரும்புத்திரை இந்த ஆண்டு பொங்கலுக்கும் வெளியாகவேண்டிய திரைப்படங்கள்.
சங்க தேர்தல்கள்
ஆனால் விஷால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க வேலையில் பரபரப்பாக இருந்ததால் சரியான நேரத்தில் இரண்டு படங்களையும் வெளியிட முடியவில்லை. இதனால் விஷாலுக்கு நஷ்டம்தான். ஆனால் அதையெல்லாம் மறக்கடிக்கும் வகையில் இந்த வருடம் துப்பறிவாளன் வெளியாகி வெற்றி பெற்று அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இரும்புத் திரை
இதைத் தொடர்ந்து சண்டகோழி-2வின் முதல் கட்ட படபிடிப்பு நிறைவடைந்து. தற்போது இரும்புத்திரை படத்தின் இறுதிக் கட்டப் படபிடிப்பு அக்டோபர் 29 தேதி ஆரம்பித்து கன மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரிச்சி ஸ்ட்ரீட் மற்றும் மவுண்ட் ரோட் பகுதிகளில் வைத்து நடைபெற்று வருகிறது.
யுவன் ஷங்கர் ராஜா
இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இரும்புத்திரை படத்தில் சமந்தா, ஆக்சன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன் மற்றும் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்துக்கு இசை, யுவன் ஷங்கர் ராஜா.
பொங்கலுக்கு
விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் விஷால் இப்படத்தை தயாரிக்கிறார். இரும்புத்திரையைப் பொங்கலுக்கு (2018) வெளியிட வேண்டும் என்பதால் படப்பிடிப்பு இந்த மாத இறுதி வரை தொடர்ந்து இடைவெளி ஏதும் இல்லாமல் நடைபெற்று வருகிறது .