Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மயிரிழையில் உயிர் தப்பிய நிவின் பாலி: பதறிய படக்குழு
Recommended Video
திருவனந்தபுரம்: காயம்குளம் கொச்சுன்னி படத்தில் நடித்த போது நிவின் பாலி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள படம் காயம்குளம் கொச்சுன்னி. இந்த படத்தில் இருந்து அமலா பால் விலகியதால் ப்ரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்துள்ளார்.
படப்பிடிப்பு சுமார் 160 நாட்கள் நடைபெற்றது.
வெளிநாடு
இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். படப்பிடிப்பின்போது நிவின் பாலி காயம் அடைந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் பேட்டி அளித்துள்ளார்.
முதலைகள்
சில காட்சிகளை படமாக்க இலங்கை சென்றோம். அங்குள்ள ஒரு ஏரியில் குதித்து நிவின் பாலி நீந்தி வர வேண்டும். ஏரி பகுதிக்கு சென்ற பிறகு தான் அங்கு சுமார் 300 முதலைகள் இருப்பது தெரிய வந்தது. சப்தம் போட்டு முதலைகளை விரட்டி விட ஒரு குழு அமைக்கப்பட்டது. விரட்டப்பட்டும் 3 முதல் 4 முதலைகள் செல்லாமல் அங்கிருந்தன. நல்ல வேளையாக அங்கு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்கிறார் ரோஷன்.
நிவின்
சண்டை காட்சிகளில் நடித்தபோது நிவின் பாலி கை உடைந்தது. இருப்பினும் மறுநாளே படப்பிடிப்புக்கு வரத் தயாராகிவிட்டார். அவரின் அர்ப்பணிப்பை பார்த்து வியந்து போனோம். அதன் பிறகு 2 நாட்கள் கழித்து ஒரு மாட்டு வண்டி நிவின் பாலி மீது விழுந்தது. அப்போது அவர் மயிரிழையில் உயிர் தப்பினார் என்று ரோஷன் தெரிவித்துள்ளார்.
மோகன்லால்
காயம்குளம் கொச்சுன்னி படத்தில் மோகன்லால் கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். மலையாள சினிமாவின் மிக பிரமாண்ட படமாக இது உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் போஸ்ட் ஃப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.