Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'இஸ்கபராரா... இஸ்கபராரா... ரெட்ட ரெட்ட மனசே...'
இந்தப் பாடலை எழுதியவர் நெல்லை பாரதி. தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரகளில் ஒருவர். சன் குழுமத்தின் 'வண்ணத்திரை' திரைப்பட பத்திரிகையின் பொறுப்பாசிரியர் இவர்.
எழுத்திலும், அதை மேடையில் பேசும் விதத்திலும் தனித்த திறமை இவருக்கு உண்டு. அதைத் தெரிந்து கொண்ட லிங்குசாமி, தனது சகோதரர் சுபாஷ் தயாரித்த பட்டாளம் படத்தில் ஜாஸிகிஃப்ட் இசையில் பாடல் எழுதும் வாய்ப்பை பாரத்திக்குத் தர, தனது புதிய பரிமாணத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
படத்தின் விளம்பரங்கள், ட்ரெய்லர்கள் தொடர்ந்து இந்தப் பாடலே ஒலிக்க, அந்தப் படத்தைவிட, பாடல் வெகு பிரபலமாகிவிட்டது.
விளைவு... வரிசையாகப் பட வாய்ப்புகள் வந்துள்ளன நெல்லைபாரதிக்கு.
வீ.தஷி இசையில் பயணங்கள் முடிவதில்லை, காதல்தோழி, என் பெயர் குமாரசாமி, படங்களுக்கும், பென்னி தயாள், கிரேஸ் கருணாஸ் குரல்களில் கண்கள் இரண்டால் படத்துக்கும், ரெஹைனா இசையில் ஹரிஷ் ராகவேந்திரா குரலில் பேசுவது கிளியா படத்துக்கும் பாடல் பதிவுகள் கூட முடிவடைந்துவிட்டன.
அடுத்து வீ.தஷி, ரெஹைனா, கருணாஸ், இசையிலும், இயக்குநர்கள் லிங்குசாமி, எஸ்.பி.ஜனநாதன், மோனா.பழனிச்சாமி, ரோஹன் கிருஷ்ணா, சுப்ரமணியம்சிவா, தாமிரா, நந்தா பெரியசாமி, பிருந்தாசாரதி, பார்த்தி பாஸ்கர், பன்னீர்செல்வம், அபிமன்யூ, பாபு.கே.விஸ்வநாத், புவனைகண்ணன் ஆகியோரது படங்களுக்கும் பாடல் எழுத வாய்ப்புகள் வந்துள்ளன.