ஐஸ்வர்யா ராய்க்கு வயது 38: பார்ட்டியுடன் கொண்டாட்டம்
முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் இன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் தாய்மையடைந்துள்ள அவரது பிறந்தநாளை பச்சன் குடும்பத்தினர் கோலாகமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனராம். இன்று மாலை மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் வீடான ஜல்சாவில் பார்ட்டி கொடுக்கின்றனர்.
இந்த பார்ட்டியில் குடும்பத்தினர், உறவினர்கள் தவிர திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா வீட்டில் இருக்கும் இந்த நாட்களை அமைதியான முறையில் கழித்துவருகிறார். குடும்பத்தார் அவரை அன்பு மழையில் நனைத்து வருகின்றனர். பிரசவ தேதி நெருங்குவதால் அவர் பதற்றமாக இல்லை மாறாக சந்தோஷமாக உள்ளார் என்று அவருக்கு நெருக்கமான நபர் தெரிவித்தார்.
ஐஸ்வர்யாவுக்கு இந்த மாதத்தின் 2வது வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இன்றைக்கே குழந்தை பிறந்துவிட்டால் அம்மாவுக்கும், பிள்ளைக்கும் ஒரே பிறந்த நாளாக இருக்குமே என்றும் சிலர் எதிர்பார்க்கின்றனர்.
அதெல்லாம் நம்ம கையிலயா இருக்கு...!


Click it and Unblock the Notifications












