twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஈழப் போராட்டத்தை திரைப்படமாக்கும் பாரதிராஜா!

    By Staff
    |

    Bharathiraja
    முப்பதாண்டு கால ஈழப் போராட்டத்தின் கசப்பான முடிவால் உண்மையையிலேயே சக தமிழர்களைப் போலவே மனதளவில் அதிகக் காயப்பட்டிருக்கிறார் இயக்குநர் பாரதி ராஜா.

    ஒரு தமிழ்ப் படைப்பாளியாக தனது பங்களிப்பை ஈழப் போராட்டத்துக்கு நிச்சயம் இந்த முறை தருவதில் உறுதியாகவுமிருக்கிறார்.

    விரைவிலேயே ஈழ மக்களின் தமிழீழக் கோரிக்கை குறித்த திரைப்படம் ஒன்றை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார் பாரதிராஜா.

    முப்பதாண்டுகால ஆயுதப் போரில் பிரபாகரனின் பங்கும், போராளிகளின் விடுதலை வேட்கையையும் எடுத்துச் சொல்லும் வகையில் அமையப் போகும் இந்தப் படத்தின் திரைக்கதையை முன்பே எழுத ஆரம்பித்திருந்தார் பாரதிராஜா. இப்போது அதை முடிக்கும் வேலையில் மும்முரமாக இறங்கிவிட்டார்.

    முழுக்க முழுக்க புது முகங்களே நடிக்கும் இந்தப் படத்தில் புலிகளின் போராட்டக் களமே, கதைக் களமாகிறது. பிரபாகரன் பாத்திரத்துக்குப் பொருத்தமான முகமாகத் தேடி வருகிறாராம்.

    சில ஆண்டுகளுக்கு முன் பிரபாகரனை தமிழ் ஈழத்தில் நேரில் சந்தித்தபோது, ஈழத் தமிழர் போராட்டம் குறித்த ஒரு விரிவான படைப்பை எதிர்ப்பார்ப்பதாக பாரதிராஜாவிடம் கேட்டுக் கொண்டாராம் பிரபாகரன்.

    அதை இப்போது நிறைவேற்றப் போகிறார் பாரதிராஜா.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X