Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சிரு மகனுடன் ஜெனீலியா
மும்பையிலிருந்து தமிழுக்கு வந்தவர் ஜெனீலியா டிசவுசா. முதலில் ஹரிணி என்ற பெயரில் நடித்தார். பின்னர் ஒரிஜினல் பெயருக்கே மாறி விட்டார்.
தமிழில் ராசியில்லாத நடிகையாக அறியப்பட்டதால் தெலுங்குக்கு இடம் பெயர்ந்தார். பின்னர் இந்திக்குத் தாவி விட்டார். அங்கு முதல் படமே ஹிட் ஆகவே தமிழ், தெலுங்கிலும் ஜெனீலியாவுக்கு புது அந்தஸ்து கிடைத்தது.
இதையடுத்து இப்போது தெலுங்கு, இந்தி என மாறி மாறி நடித்து வருகிறார். தமிழிலும் சில வாய்ப்புகள் பேச்சுவார்த்தையில் உள்ளதாம்.
தெலுங்கில் ஹிட்டான பொம்மரிலு தமிழில் சந்தோஷ் சுப்ரமணியம் என்ற பெயரில் வெளியாகி அதுவும் சூப்பர் ஹிட் ஆனது. இப்போது பொம்மரிலுவை இயக்கிய பாஸ்கர், அடுத்து இயக்கப் போகும் புதிய தெலுங்குப் படத்திலும் ஜெனீலியா நடிக்கிறார். இதில் அவருடன் ஜோடி போடுவது சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா. நம்ம ஊர் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைப்பாளர்.
தொடர்ந்து இளம் நடிகர்களுடனேயே நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதால் படு சந்தோஷமாக இருக்கிறாராம் ஜெனீலியா.