துபாயில் நடனப் பள்ளி-துவக்கி வைத்த பிரபுதேவா

பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் முன்னிலையில் தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா பள்ளியைத் திறந்து வைத்தார்.
ஐந்து ஆசிரியர்கள் மற்றும் 220 மாணவர்களுடன் துவக்கப்பட்டுள்ள இந்த பள்ளியி்ல் சேர வயது வரம்பு இல்லை.
இப்பள்ளியின் கிளைகள் இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன.
நிகழ்வில் பேசிய சரோஜ்கான், பிரபுதேவாவை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றார்.
பிரபுதேவா பேசுகையில், நடனத்திற்கு தேவை ஆர்வம் மட்டுமே தேவை. எனக்குப் பிடித்த சிறந்த நடனமாடும் நடிகர் சிரஞ்சீவி என்றார்.
நிகழ்ச்சியில் நடனப் பள்ளி மாணவர்களின் நடனங்களும் அரங்கேறின.


Click it and Unblock the Notifications











