Don't Miss!
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கந்தசாமி பார்க்க வரும் குழந்தைகளுக்கு கோழி மாஸ்க்!
கந்தசாமி பெரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலைப்புலி தாணு, நடிகர் விக்ரம், நடிகை ஸ்ரேயா மற்றும் இயக்குநர் சுசி கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
கலைப்புலி தாணு பேசுகையில், கந்தசாமி படம், ஏழையாக இருந்த தன்னை கோபுரத்துக்கு உயர்த்திவிட்டுள்ளது என்றும், வாழ்வில் தான் காணாத பெரும் லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.
உலகம் முழுக்க இப்படத்தின் முதல் வார வசூல் மட்டும் ரூ.37 கோடி என்றும் இந்த வாரம் அது ரூ 50 கோடியைத் தாண்டிவிடும் என்றும் கூறிய தாணு, ஒரு வெற்றிப் படம் என கந்தசாமியை அறிவிக்க இதைவிட வேறென்ன வேண்டும் என்றார்.
"சிலர் படம் குறித்து தனிப்பட்ட முறையில் கீழ்த்தரமாக விமர்சிப்பதை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் அதை தீவிரமாகக் கையாள நினைத்திருந்தால் 24 பிட் போஸ்டர் போட்டு வெளுத்துவிட முடியும். ஆனால் எனக்கு ரசிகர்கள்தான் நடுவர்கள். அவர்கள் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். நல்ல பத்திரிகைகள் சரியான விமர்சனத்தை வெளியிட்டுள்ளன.
மனநோய் பிடித்த, வக்கிரம் எண்ணம் கொண்ட சிலர் வைத்ததே இந்த சினிமா உலகில் சட்டமாகிவிடாது. நல்ல பொழுது போக்குப் படமான கந்தசாமியை திட்டியவர்கள் விளங்கவே மாட்டார்கள்" என்று உணர்ச்சி வசப்பட்டார் தாணு.
பின்னர், இந்தப் படத்தின் வசூல் மிகச் சிறப்பாக இருப்பதால் அதன் ஒரு பகுதியை, தாங்கள் தத்தெடுத்த கிராமங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு வழங்கப்போவதாக அறிவித்தார் தாணு.
படத்துக்கு குழந்தைகள் மத்தியிலும் பெரும் வரவேற்பு இருப்பதால், அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில், இனி படம் பார்க்க வரும் ஒவ்வொரு குழந்தைக்கும், படத்தில் விக்ரம் அணிந்து வருவதைப் போன்ற கோழி மாஸ்க் இலவசமாக வழங்கப்படும் என்றார் தாணு.