Don't Miss!
- Finance சாமானியர்களின் குடும்ப பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் உணவு பணவீக்கம்..!
- Lifestyle பெண்களின் இடுப்பின் அளவு அவர்களின் கருவுறுதல் திறனை பாதிக்குமாம்... ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு...!
- Automobiles இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!
- Sports சீன் போட்றதுல எந்த குறைச்சலும் இல்ல.. வெறும் பனியன் உடன் விமான நிலையம் சென்ற ஹர்திக் பாண்டியா
- News 100க்கு 100 பொய்யான கேள்வி.. பாஜகவின் மாயாஜாலம்.. அத்தனையும் பித்தலாட்டம்.. திமுக தாக்கு
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
விவேக்கின் திருக்குறள் பணி!
ஒரே மாதிரி காட்சிகளில் அடிக்கடி வந்து கொண்டிருப்பது ரசிகர்களைக் கடுப்படித்து விட்டதைப் புரிந்து கொண்டதால், தனது அடுத்த படத்தில் முழுக்க முழுக்க வித்தியாசமாக திருக்குறளை அடிப்படையாக வைத்து காமெடிக் காட்சிகளை அமைக்க உள்ளாராம்.
ஆர்.பாலு இயக்கத்தில் ஆனந்த கண்ணன், வர்ஷினி நடிக்கும் 'இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?' படத்தில் தமிழ்தாசன் என்ற வேடத்தில் நடிக்கும் விவேக், திருக்குறளுக்கு தனது பாணியில் விளக்க உரை தரப்போகிறாராம்.
அவரது ஒவ்வொரு காமெடி காட்சி முடிவிலும் ஒரு குறள் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்வது போல அமைத்திருக்கிறார்களாம்
பரவாயில்லையே.. நல்ல யோசனையாக உள்ளதே... என்று விவேக்கைக் கேட்டால்,
"இந்த மாதிரி காட்சிகளை அமைக்கலாம் என்ற யோசனைக்குக் காரணமே இயக்குனர் எஸ்பி முத்துராமன்தான். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதன் முடிவில் ஒரு திருக்குறளைச் சொல்வது அவர் வழக்கம். அதையே சினிமாவிலும் சொன்னால், ரசிகர்களை எளிதில் சென்றடையும் என்று நினைத்தேன்.
என் கருத்துக்கு டைரக்டர் பாலு உடன்பட்டார். நான் வருகின்ற ஒவ்வொரு காட்சி முடிவிலும், ஒரு திருக்குறளைச் சொல்கிறேன். அதற்கு எளிமையான விளக்கமும் கொடுக்கிறேன்... எல்லா தரப்பு ரசிகராலும் இதைப் புரிந்துகொண்டு ரசிக்கும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.