Don't Miss!
- News கர்நாடகா: ஏப்.26-ல் முதல் கட்ட தேர்தல்- களத்தில் 247 வேட்பாளர்கள்! இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Sports பவுலர்களை குறி வைத்து அடித்தேன்.. பதிரானாவிடம் எச்சரிக்கையாக இருந்தோம்.. ஸ்டாய்னிஸ் ஓபன் டாக்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார் எமி ஜாக்சன்
மதராசப்பட்டினத்தில் தனது அழகான, இயல்பான நடிப்பால் அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்ட எமி ஜாக்சன் மீண்டும் தமிழில் நடிக்கப் போகிறாராம்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் எமி ஜாக்சன். இவரை தனது மதராசப்பட்டினத்தில் நாயகியாக நடிக்க வைத்தார் இயக்குநர் விஜய். ஆர்யாவுடன் இணைந்து இயல்பான, அழகான, காவியமான நடிப்பை வெளிக் காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் எமி.
எமியின் நடிப்பை இயக்குநர் கே.பாலச்சந்தர் வெகுவாக பாராட்டியிருந்தார். இவர் பிற்காலத்தில் மிகப் பெரிய நடிகையாக ஹாலிவுட்டைக் கலக்குவார் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் தமிழுக்கு வருகிறார் எமி. முதல் படத்தில் ஆர்யாவுடன் நடித்த எமி, தற்போது சூர்யாவுடன் ஜோடி போடப் போகிறார். படத்தை இயக்கப் போவது நாயகிகளுக்கு பெரும் முக்கியத்துவம் தரும் கெளதம் மேனன்.
தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்த பின்னர் எமி, சூர்யாவை வைத்து இயக்கும் படத்திற்கு கெளதம் வருவார் என்று தெரிகிறது.
விரைவில் இதுதொடர்பான தகவல்களை எதிர்பார்க்கலாம் என கோலிவுட் பட்சி கூறுகிறது.