Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பாலா மீது மீண்டும் வழக்கு?
ரஜினி நடித்த பாபா படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. இவர்தான் பிதாமகனை எவர்கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருந்தார். இந்தப் படத்துக்கு முதல் பிரதி அடிப்படையில் பாலா சொன்ன பட்ஜெட் நான்கு கோடியே ஐம்பது லட்சம்.
இதற்குமேல் செலவானால் அதற்கு பாலாதான் பொறுப்பு என்றும், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் படத்தை முடிக்காதபட்சத்தில், வருடத்திற்கு நான்கு லட்சம் வட்டியுடன் பாலா, துரைக்கு தர வேண்டும் என்றும் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தமே போடப்பட்டது.
ஆனால், தான் சொன்ன பட்ஜெட்டை விட நான்கு கோடி அதிகம் செலவழித்திருக்கிறார் பாலா. மேலும் திட்டமிட்டதைவிட மேலும் ஒரு வருடம் அதிகம் எடுத்துக் கொண்டாராம். இதனால் தனக்கு பாலா 90 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாகத் தரவேண்டும் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் துரை.
காலதாமதமாக தொடரப்பட்ட வழக்கு என்று நீதிபதி இதனை முதலில் தள்ளுபடி செய்தார். துரை மேல் முறையீடு செய்ததில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது.
பாலா மீது இப்போது துரை வழக்குத் தொடரலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இந்த விவகாரத்தில் படம் வியாபாரமான பிறகு பாலாவுடன் சமரசமாகிவிட்டதாக துரை தெரிவித்திருந்தார். இப்போது நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளதால் மீண்டும் வழக்குத் தொடரப்போகிறாரா என்பது தெரியவில்லை.