Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
இது சீரியஸான மேட்டரில்லை!-ஆக்கர் ஸ்டுடியோ
சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் முதல் படம் கோவா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பாடல் வெளியீ்ட்டுக்கு திட்டமிடப்பட்டு வருகிறது.
வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படம் முதலில் ரஜினியின் பிறந்த நாளன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்தப் படத்தின் ஆடியோவை ரஜினி பிறந்த நாளன்று வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் இரண்டுமே இப்போது நடக்குமா என்று ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
காரணம், கோவா படத்துக்கு பைனான்ஸ் செய்த வருண் என்பவர் கோர்ட்டுக்குப் போய் டிசம்பர் 11 வரை படம் வெளியாகக் கூடாது என தடை உத்தரவு வாங்கியுள்ளார்.
இந்நிலையில் சௌந்தர்யா ரஜினியின் ரியாக்ஷன் குறித்து அறிய ஆக்கர்ஸ் ஸ்டுடியோவைத் தொடர்பு கொண்டோம்.
சௌந்தர்யா சார்பில் பேசிய அவரது உதவியாளர், "இது ஒரு சீரியான மேட்டரே இல்லை. சினிமாவில் இது சாதாரண விஷயம். படத்துக்கு பைனான்ஸ் வாங்கியது உண்மை. அதில் சிறிய தாமதம் ஏற்பட்டுவிட்டது. இனி இந்த விவகாரத்தை ஆக்கர்ஸ் ஸ்டுடியோ பார்த்துக் கொள்ளும். திட்டமிட்டபடி படம் வெளியாகும்" என்றார்.