Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கருணாநிதியின் புதிய படம்... தயாரிப்பு இளையராஜா?
முதல்வர் கருணாநிதியின் சாரப்பள்ளம் சாமுண்டி என்ற கதைதான் உளியின் ஓசை என்ற படமாக வெளிவந்தது. அந்தப் படத்துக்கு இளையராஜாதான் இசையமைத்தார். 100 நாட்கள் ஓடிய இந்தப் படத்தின் கதை தனக்கு மிகப் பிடித்தமான ஒன்று என்று தெரிவித்த இளையராஜா, முதல்வர் கருணாநிதி கதை திரைக்கதை வசனத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றைத் தயாரிக்க விரும்புவதாக கூற, உடனடியாக ஒப்புக் கொண்டுள்ளார் முதல்வர்.
இந்தப் படத்தையும் உளியின் ஓசை படத்தைத் இயக்கிய இளவேனில்தான் இயக்குகிறார். இதுவரை முதல்வர் கதை வசனம் எழுதிய படங்களிலேயே மிக வித்தியாசமானதாக இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள். கருணாநிதியின் புகழ்பெற்ற பாத்திரப் படைப்புகள் இந்தப் படத்தில் இடம்பெறுவதாக காட்சிகள் அமைக்கப் போகிறாராம் இளவேனில்.
சமீப காலத்தில் இசைஞானியின் படங்களில் பெரிதாக பாடல்கள் ஹிட் ஆகவில்லையே என்ற அவர்களது ரசிகர்களின் குறையும் நீங்கும் அளவுக்கு இந்தப் படம் இசைக்கு முக்கியத்துவம் உள்ளதாக அமையும் என்கிறார்கள்.
இதற்கிடையே, பெண்சிங்கம் படத்தையடுத்து, புதிய படத்தைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக உள்ளது நந்தினி ஆர்ட்ஸ். மீண்டும் கருணாநிதியின் கதை வசனத்தில் பாலி ஸ்ரீ ரங்கத்தை வைத்து புதிய பட பூஜைக்கு தயாராகிறது இந்த நிறுவனம்.